NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மும்பை - நாக்பூர் விரைவு சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதால் 7 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மும்பை - நாக்பூர் விரைவு சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதால் 7 பேர் பலி

    மும்பை - நாக்பூர் விரைவு சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதால் 7 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Jun 29, 2024
    09:27 am

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிராவின் ஜல்னாவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதால் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

    நேற்று இரவு 11 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. தகவல்களின்படி, பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்ட ஒரு வாகனம் தவறான திசை வழியாக நெடுஞசாலைக்குள் நுழைந்ததால் இரண்டு கார்களும் மோதிக்கொண்டன.

    இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிறிது நேரம் வரை அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    நேற்று இரவு 11 மணியளவில், எரிபொருள் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்க்கிற்கு சென்ற ஒரு ஸ்விஃப்ட் டிசையர் கார் தவறான திசை வழியாக நெடுஞ்சாலைக்குள் நுழைந்து, நாக்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த எர்டிகா மீது மோதியது.

    இந்தியா 

    6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் 

    ஸ்விஃப்ட் டிசையர் கார் மோதிய வேகத்தில் எதிரே வந்த எர்டிகாவானது காற்றில் பறந்து சென்று, நெடுஞ்சாலையில் இருந்த தடுப்புக் கம்பி மீது பலமாக மோதியது. இதனால், அதில் இருந்த பயணிகளும் காருக்கு வெளியே வீசி எறியப்பட்டனர்.

    6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் இரத்தம் தோய்ந்த உடல்கள் நெடுஞ்சாலையில் கிடப்பதை சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள வீடியோக்கள் காட்டுகின்றன.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சமுருத்தி நெடுஞ்சாலை போலீசார் மற்றும் ஜல்னா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கார்களை அகற்றுவதற்காக கிரேன் ஒன்று இயக்கப்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை
    விபத்து

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    மும்பை

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட்
    பிரான்சில் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமானம் இன்று மும்பை வந்து சேர்ந்தது  விமான நிலையம்
    மும்பையில் செயல்படும் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்  ரிசர்வ் வங்கி
    கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் நடிகர் சூர்யா

    விபத்து

    இந்திய மாணவியை கார் மோதி கொன்ற வழக்கு: அமெரிக்க காவல் அதிகாரி விடுவிப்பு அமெரிக்கா
    தெலங்கானா பிஆர்எஸ் MLA லாஸ்யா நந்திதா கார் விபத்தில் பலி  தெலுங்கானா
    வீடியோ: தெலுங்கானாவில் பறந்து வந்து மற்றொரு வாகனம் மீது மோதிய கார்  தெலுங்கானா
    கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மாலின் இரும்பு கூரை சரிந்து விழுந்ததால் 2 பேர் பலி நொய்டா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025