NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சமூக அமைதியை கெடுப்பதே பா.ஜ.க.வின் நோக்கம் - 28ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சமூக அமைதியை கெடுப்பதே பா.ஜ.க.வின் நோக்கம் - 28ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்
    சமூக அமைதியை கெடுப்பதே பா.ஜ.க.வின் நோக்கம் - 28ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்

    சமூக அமைதியை கெடுப்பதே பா.ஜ.க.வின் நோக்கம் - 28ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்

    எழுதியவர் Nivetha P
    Feb 23, 2023
    03:35 pm

    செய்தி முன்னோட்டம்

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று(பிப்.,23) நடந்தது.

    இதில் திருமாவளவன் பேசுகையில், அண்மை காலமாக வன்முறைகளை தூண்டும் தரம்கெட்ட பேச்சுக்கள், ஆபாசமான விமர்சனங்கள் , வீம்புக்கு வம்பிழுப்பது, வீணான அவதூறுகள் மூலம் சமூக அமைதியை கெடுப்பது போன்றவைகளை பாஜக நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டி பேசினார்.

    மேலும் பேசிய அவர், வடமாநிலங்களில் செய்யும் அரசியலை போல தமிழகத்திலும் செய்து தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற சதித்திட்டம் தீட்டுகிறது பாஜக என்றும் அவர் கூறினார்.

    தொடர்ந்து, சனாதன பயங்கரவாதிகளின் இத்தகைய சதியை முறியடித்து தமிழகத்தில் சமூக அமைதியை, மத நல்லிணக்கத்தை காப்பாற்ற வேண்டியது நமது கடமை என்றும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

    கண்டன ஆர்ப்பாட்டம்

    ஆர்ப்பாட்டத்தில் தோழமை கட்சிகளின் தலைவர்களையும் பங்கேற்க அழைப்புவிடுக்க முடிவு

    இதனையடுத்து விசிக தலைமை நிர்வாக குழு கூட்ட தீர்மானம் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    அது குறித்த அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுப்பதற்கு முயலும் பாஜக'வை கண்டித்து வரும் பிப்.,28ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழமை கட்சிகளின் தலைவர்களையும் பங்கேற்க அழைப்புவிடுக்க போவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து அதனை செயல்பட விடாமல் முடக்குவதற்கு தமிழகத்தில் திட்டமிடப்பட்ட படி பாஜகவும் அதன் அமைப்புகளும் செயல்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    ஆர்ப்பாட்டம்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா

    பாஜக

    "கூர்மையான ஆயுதங்கள் வைத்துக்கொள்ளுங்கள்": மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி இந்தியா
    பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது? தமிழ்நாடு
    சென்னையில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள் திமுக
    சேது சமுத்திரம் திட்டம் தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது தமிழ்நாடு

    ஆர்ப்பாட்டம்

    கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெரிந்த ஆப்கான் பேராசிரியர்! உலகம்
    ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள் மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025