NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரபிக்கடலில் நீண்ட காலம் நிலைகொண்டிருக்கும் புயல் என்ற பெயரை பெற்றது 'பிபர்ஜாய்'
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரபிக்கடலில் நீண்ட காலம் நிலைகொண்டிருக்கும் புயல் என்ற பெயரை பெற்றது 'பிபர்ஜாய்'
    1998இல் பதிவான புயல் மிக அதிதீவிரமான புயலாகும்.

    அரபிக்கடலில் நீண்ட காலம் நிலைகொண்டிருக்கும் புயல் என்ற பெயரை பெற்றது 'பிபர்ஜாய்'

    எழுதியவர் Sindhuja SM
    Jun 15, 2023
    10:52 am

    செய்தி முன்னோட்டம்

    இன்று(ஜூன் 15) குஜராத் கடற்கரையை கடக்க இருக்கும் 'பிபர்ஜாய்' புயல், அரபிக்கடலில் நீண்ட காலம் நிலைகொண்டிருக்கும் புயல் என்ற பெயரை பெற்றுள்ளது.

    ஜூன் 6 ஆம் தேதி உருவான இந்த புயல் சுமார் 8 நாட்களாக அரபிக்கடலில் நிலைகொண்டுள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையத்தின்(IMD) தரவுகளின்படி, 1965க்குப் பிறகு ஜூன் மாதத்தில் குஜராத்தை தாக்க இருக்கும் மூன்றாவது புயல் இதுவாகும்.

    இதற்கு முன்பு, 1996 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் மிக பெரும் புயல்கள் ஜூன் மாதத்தில் குஜராத்தை தாக்கின.

    அதிலும், 1998இல் பதிவான புயல் மிக அதிதீவிரமான புயலாகும். இந்த புயல் மணிக்கு 160 கிமீ வேகத்தில் போர்பந்தர் கடற்கரையைத் தாக்கியது. இதனால், 1,176 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

    ஞ்ச்ஸ்

    25 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதம் குஜராத் கடற்கரையைத் தாக்கும் முதல் புயல்

    அதிதீவிரமான பிபர்ஜாய் புயல் குஜராத்தின் மாண்ட்வி மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரையை கடக்கும் போது மணிக்கு 125-135 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    25 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதம் குஜராத் கடற்கரையைத் தாக்கும் முதல் புயல் இதுவாகும்.

    அரபிக் கடலில், 1965இல் இருந்து 2023வரை பிபர்ஜாய் புயலை தவிர 13 புயல்கள் உருவாகி இருக்கின்றன.( ஜூன் மாதத்தில் மட்டும்)

    இவற்றில் ஆறு புயல்கள் அரபிக்கடலிலேயே வலுவிழந்துவிட்டது, இரண்டு புயல்கள் குஜராத் கடற்கரையைக் கடந்தன. மகாராஷ்டிரா, பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் தலா ஒரு புயல் கரையை கடந்திருக்கிறது.

    அவற்றுள், 2019இல் உருவான 'கியார்' புயல் மிகவும் ஆபத்தான புயலாக கருதப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வானிலை ஆய்வு மையம்
    புயல் எச்சரிக்கை
    குஜராத்

    சமீபத்திய

    10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் மாவோயிஸ்ட்
    16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது! பருவமழை
    எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை ரிசர்வ் வங்கி
    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்

    இந்தியா

    தீவிரமடைந்த 'பிபர்ஜாய்' புயல்: குஜராத், மும்பைக்கு கடும் எச்சரிக்கை  மும்பை
    உயரும் விமானக் கட்டணம்.. ஆய்வு செய்த சர்வதேச கூட்டமைப்பு! விமான சேவைகள்
    டிசிஎஸ் நிறுவனத்தில் பணியில் இருந்து அதிகளவில் விலகும் பெண் பணியாளர்கள்.. ஏன்? டிசிஎஸ்
    CoWIN போர்டல்: கொரோனா தடுப்பூசி போட்ட இந்தியர்களின் தரவுகள் கசிவு  கொரோனா

    வானிலை ஆய்வு மையம்

    11 தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம் இந்தியா
    கேரளாவில் பருவமழை தொடங்கியது: தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் இந்தியா

    புயல் எச்சரிக்கை

    அமெரிக்காவைப் புரட்டி போடும் பனிப்புயல்! என்ன நடக்கிறது அங்கே? அமெரிக்கா
    வங்கக்கடலில் வரும் 6ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை
    தமிழகத்தினை வெளுக்க வருகிறது மோக்கா புயல் - வானிலை அறிக்கை  தமிழ்நாடு
    உருவாகும் புயல் - 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  தமிழ்நாடு

    குஜராத்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! தேர்தல் முடிவு
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் முதல் அமைச்சர்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? தேர்தல் முடிவு
    இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025