NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 17 சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தை கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    17 சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தை கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை
    பைக் வீலிங்கில் ஈடுபட்ட 17 வயது சிறுவன்

    17 சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தை கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை

    எழுதியவர் Nivetha P
    Dec 27, 2022
    10:33 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை எல்டாம்ஸ் சாலை அருகே இளைஞர் ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது.

    இது குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    70க்கும் அதிகமான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் அந்த பைக் சாகசத்தில் ஈடுபட்டது, மதுரவாயல் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் 17 வயது மாணவன் என்பது தெரியவந்துள்ளது.

    அந்த மாணவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஓட்டுநர் உரிமம் இன்றி அந்த சிறுவன் வண்டி ஒட்டியது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து, அச்சிறுவனையும், வாகனத்தை ஓட்ட அனுமதித்த அவனின் தந்தையான மெக்கானிக் வேலை செய்யும் கோபால் என்பவரையும் போலீசார் கைது செய்தது.

    சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சிறுவன் அடைப்பு

    தந்தை மற்றும் மகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார்

    அதனையொட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல், 18 வயது நிரம்பாதவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் கைதான தந்தை மற்றும் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தது.

    இதனையடுத்து இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பைக் ஒட்டிய சிறுவன் 18 வயது நிரம்பாதவர் என்பதால் அவரை சீர்திருத்த பள்ளியிலும், அவரது தந்தையை சிறையிலும் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    முன்னதாக சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் 18 வயது நிரம்பாத சிறுவனும், ஓட்டுநர் உரிமம் இல்லாத இளைஞரும் ஸ்பீடோ மீட்டரில் அதிவேகத்தை பதிவு செய்ய 114 கிமீ வேகத்தில் சென்று விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை

    சமீபத்திய

    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? தமிழ்நாடு
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025