NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆட்டோவில் ஏற மறுத்தவர் மீது ஆட்டோவை விட்டு ஏற்றிய ஆட்டோ ஓட்டுநர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆட்டோவில் ஏற மறுத்தவர் மீது ஆட்டோவை விட்டு ஏற்றிய ஆட்டோ ஓட்டுநர் 
    போக்குவரத்து போலீசார் ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஆட்டோவில் ஏற மறுத்தவர் மீது ஆட்டோவை விட்டு ஏற்றிய ஆட்டோ ஓட்டுநர் 

    எழுதியவர் Sindhuja SM
    May 26, 2023
    04:41 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூர் HSR லேஅவுட்டில் அசார் கான் என்ற நபர், ஒரு ஆட்டோ ஓட்டுநரால் நேற்று அதிகாலை தாக்கப்பட்டார்.

    அசார் கான், குற்றம்சாட்டப்பட்டவரின் ஆட்டோவில் சவாரி செய்ய மறுத்துவிட்டு, அதற்கு பதிலாக ரேபிடோ பைக் டாக்ஸியைத் தேர்ந்தெடுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    சம்பவத்தின் போது டிரைவர் குடிபோதையில் இருந்ததாக அசார் கான் தெரிவித்துள்ளார்.

    இந்த வேதனையான அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட அசார் கான், "நேற்றிரவு 3:00 மணிக்கு நான் ரேபிடோ பைக் செயலி மூலம் சவாரியை புக் செய்திருந்தேன். அப்போது, குடிபோதையில் பெங்களூர் HSR லேஅவுட் செக்டார் 1க்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவை என் மீது மோதினார். என்னை ஆட்டோவில் அடித்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்." என்று தெரிவித்துள்ளார்.

    DETAILS

    தலைமறைவான ஆட்டோ ஓட்டுநரை பிடிக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்

    அசார் கான், இந்த சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோ காட்சியில், அசார் கான் குற்றம்சாட்டப்பட்ட ஆட்டோ ஒட்டுநருடன் சிறிது நேரம் பேசி கொண்டிருப்பது தெரிகிறது.

    அதற்கு பிறகு, அவர் ஆட்டோவை விட்டு கொஞ்சம் தள்ளி வந்து நின்று கொள்கிறார்.

    இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர், திடீரென தனது வாகனத்தை ஸ்டார்ட் செய்து வேண்டுமென்றே அசார் மீது மோதிவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    சிசிடிவி ஆதாரம் மற்றும் அசாரின் முறையான புகாரின் அடிப்படையில் மடிவாலா போக்குவரத்து போலீசார் ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தலைமறைவான ஆட்டோ ஓட்டுநரை பிடிக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பெங்களூர்
    குற்றவியல் நிகழ்வு

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்

    இந்தியா

    UPSC சிவில் சர்வீசஸ் முடிவுகள் வெளியீடு: முதல் 4 இடங்களை பிடித்த பெண்கள்  இந்தியா
    ரூ.2,000 நோட்டினை பெட்ரோல் பங்க் வாங்க மறுப்பு - ஊற்றிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர்  உத்தரப்பிரதேசம்
    மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு மத்திய அரசு
    இந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு ஆஸ்திரேலியா

    பெங்களூர்

    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் கர்நாடகா
    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இசையமைப்பாளர்கள்
    ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை திருவண்ணாமலை

    குற்றவியல் நிகழ்வு

    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல்  இந்தியா
    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு  இந்தியா
    பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025