NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு 
    பெங்களூரில் மீண்டும் கூடுகின்றன எதிர்க்கட்சிகள், சரத் பவார் அறிவிப்பு

    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு 

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 29, 2023
    07:09 pm

    செய்தி முன்னோட்டம்

    எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூரில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் வியாழக்கிழமை (ஜூன் 29) தெரிவித்தார்.

    முன்னதாக ஜூன் 23 அன்று, பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள 16 எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஒருங்கிணைந்த வியூகத்தை உருவாக்குவது குறித்து விவாதித்தன.

    நான்கு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே கடுமையான கருத்துப் பரிமாற்றங்களுடன் முடிவடைந்தது.

    இதன் பிறகு, டெல்லியில் மத்திய அரசின் தலையீட்டை பகிரங்கமாக கண்டிக்கும் வரை, எதிர்காலத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என்று கூறிவிட்டு ஆம் ஆத்மி விலகிவிட்டது.

    oppostion meet shifted from shimla to bengaluru

    இரண்டாவது எதிர்க்கட்சி கூட்டம் சிம்லாவிலிருந்து பெங்களூருக்கு மாற்றம் 

    பாட்னா கூட்டத்தின் முடிவில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பாஜகவுக்கு எதிராக ஐக்கிய முன்னணிக்கு வியூகம் வகுப்பதற்கான அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், அந்த கூட்டம் தற்போது சிம்லாவில் இருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளதாக சரத் பவார் அறிவித்துள்ளார்.

    முதல் கூட்டம் நாட்டின் வடபகுதியில் நடந்துள்ள நிலையில், இரண்டாவது கூட்டத்தை தென்னிந்தியாவில் நடத்துவது தான் சரியாக இருக்கும் என கருதியதால்தான் இடத்தை மாற்றியதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

    பொதுவான பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாமல், 2004ஐ போல் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    2024 மக்களவை தேர்தல்
    பெங்களூர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பாஜக

    முடிவடைந்தது வாக்கு எண்ணிக்கை: கர்நாடகாவில் காங்கிரஸுக்கு தனி பெரும் வெற்றி  இந்தியா
    மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் எதற்கு சம்மன் அனுப்பியது இந்தியா
    சில செய்தி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு உறுதி - டி.கே.சிவகுமார் பேட்டி  காங்கிரஸ்
    'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு  தமிழ்நாடு

    2024 மக்களவை தேர்தல்

    தமிழகத்தில் இருந்து 25 NDA தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்: அமித்ஷா  அமித்ஷா

    பெங்களூர்

    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் இந்தியா
    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இசையமைப்பாளர்கள்
    ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை திருவண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025