NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பதியில் தானியங்கி முறையில் லட்டு தயாரிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பதியில் தானியங்கி முறையில் லட்டு தயாரிப்பு
    திருப்பதியில் ரூ.50 கோடி செலவில் நவீன முறையில் லட்டு தயாரிப்பு - ரிலையன்ஸ் குழுமம்

    திருப்பதியில் தானியங்கி முறையில் லட்டு தயாரிப்பு

    எழுதியவர் Nivetha P
    Feb 02, 2023
    11:40 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் 74வது குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதியன்று திருமலையில் உள்ள கோகுலம் இல்ல வளாகத்தில் தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தேசிய கொடியினை ஏற்றினார்.

    அதன் பின்னர் பேசிய தர்மா ரெட்டி அவர்கள் கூறியதாவது, இந்த ஆண்டின் முக்கிய இரண்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

    அதன்படி திருமலையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஒன்றினை அமைக்கவும், லட்டு தயாரிப்பினை 'ஆட்டோமேஷன்' என்னும் தானியங்கி முறையில் நவீனமயமாக்கவும் முயற்சிகள் எடுக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

    இதற்கு உதவும் வகையில் இரண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியதற்கு ஏதுவாக திருப்பதியில் 4000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகத்தை ரூ.120 கோடி செலவில் அமைக்க 'டாடா' நிறுவன அறக்கட்டளை முன்வந்துள்ளது.

    தங்குமிடங்கள் புனரமைப்பு

    திருப்பதியில் ரூ.50 கோடி செலவில் நவீன முறையில் லட்டு தயாரிப்பு - ரிலையன்ஸ் குழுமம்

    அதே போல், 'ரிலையன்ஸ்' குழுமம் 'ஆட்டோமேஷன்' என்னும் தானியங்கி முறையில் ரூ.50 கோடி செலவில் லட்டுகளை நவீன முறையில் தயாரித்து தருவதற்கு ஒப்புதல் அறிவித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த இரண்டு திட்டங்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் முடிக்கப்படும் என்று கூறிய தர்மா ரெட்டி, இந்த நவீன முறையில் தயாரிக்கப்படும் லட்டுகளின் அளவு அதிகரிப்பதோடு தரமும் அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், திருப்பதியில் உள்ள தங்குமிடங்கள் ரூ.230 கோடி ரூபாய் செலவில் 90 சதவிகிதம் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில மாதங்களில் முழு பணிகளும் முடிவுறும் என்று கூறினார்.

    மேலும், ரூ.100 கோடி செலவில் பக்தர்களுக்காக இன்னுமொரு வளாகமும் கட்டப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி

    சமீபத்திய

    16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது! பருவமழை
    எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை ரிசர்வ் வங்கி
    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்
    கூட்டுறவு சங்கத்தில் 50 சவரன் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்  சிவகங்கை

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025