NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரு சிக்கன் நெக்கில் கைவைத்தால் இரண்டு சிக்கன் நெக் பறிபோகும்; பங்களாதேஷுக்கு அசாம் முதல்வர் எச்சரிக்கை
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரு சிக்கன் நெக்கில் கைவைத்தால் இரண்டு சிக்கன் நெக் பறிபோகும்; பங்களாதேஷுக்கு அசாம் முதல்வர் எச்சரிக்கை
    அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பங்களாதேஷிற்கு எச்சரிக்கை

    ஒரு சிக்கன் நெக்கில் கைவைத்தால் இரண்டு சிக்கன் நெக் பறிபோகும்; பங்களாதேஷுக்கு அசாம் முதல்வர் எச்சரிக்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    May 22, 2025
    03:55 pm

    செய்தி முன்னோட்டம்

    அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பங்களாதேஷிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இரு நாடுகளிலும் மூலோபாய வழித்தடங்களை அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்தியாவின் சிலிகுரி வழித்தடத்தில் பங்களாதேஷ் கவனம் அதிகரித்து வருவதற்கு பதிலளிக்கும் விதமாக அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

    இந்த சிலிகுரி காரிடார் சிக்கன்'ஸ் நெக் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் பிரதான நிலப்பகுதியை அதன் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் குறுகிய 22 கிமீ அகலமுள்ள பகுதியாகும்.

    இதுகுறித்து ஊடகங்களுக்கு உரையாற்றிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, இந்தியா ஒரு சிக்கன்'ஸ் நெக் வைத்திருந்தாலும், பங்களாதேஷ் இரண்டு சிக்கன்'ஸ் நெக் கொண்டுள்ளதை மறந்துவிடக் கூடாது என்று எச்சரித்தார்.

    சிக்கன்'ஸ் நெக்

    இரண்டு சிக்கன்'ஸ் நெக்கிலும் பதிலடி

    "பங்களாதேஷ் நமது சிக்கன்ஸ் நெக்கை குறிவைத்தால், நாம் அவர்களின் இரு சிக்கன் நெக்ஸையும் குறிவைத்து பதிலடி கொடுப்போம்." என்று அவர் கூறினார்.

    மேகாலயாவை வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்துடன் இணைக்கும் வழித்தடம் இந்தியாவின் சிலிகுரி காரிடாரை விடவும் மெல்லியதாகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாகவும் உள்ளது என்பதை அவர் குறிப்பிட்டார்.

    சிலிகுரி வழித்தடத்திலிருந்து வெறும் 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள லால்மோனிர்ஹாட்டில் இரண்டாம் உலகப் போரின் விமானத் தளத்தை மீண்டும் கட்டுவதில் சீனா வங்கதேசத்திற்கு உதவி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

    இந்தப் பகுதியின் மூலோபாய முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வு இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் எச்சரிக்கைகளை எழுப்பியுள்ளது.

    இரண்டாவது சிக்கன் நெக்

    பங்களாதேஷில் இரண்டாவது சிக்கன் நெக்

    பங்களாதேஷில் உள்ள இரண்டு குறுகிய வழித்தடங்களில் ஒன்று சிட்டகாங்கை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் அதே வேளையில், மற்றொன்று ரங்பூர் பிரிவுக்கு அருகில் அமைந்துள்ளது. அதன் இணைப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்த இரண்டும் இன்றியமையாதவை.

    இரண்டில் ஒன்றைத் தடுப்பது வங்கதேசத்தை கணிசமாக பாதிக்கலாம். ஹிமந்தா பிஸ்வா சர்மா இந்தியாவின் ராணுவ வலிமையையும் குறிப்பிட்டு, ஆபரேஷன் சிந்தூரை தீர்க்கமான நடவடிக்கைக்கான உதாரணமாகக் குறிப்பிட்டார்.

    மேலும் இந்தியாவின் உறுதியைச் சோதிக்கும் வேலையில் பங்களாதேஷ் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்தார்.

    குறிப்பாக பங்களாதேஷ் இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ் சமீபத்தில் சீனாவுக்கு சென்றபோது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்து பேசியதை அடுத்து ராஜதந்திர பதட்டம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    அசாம்
    இந்தியா

    சமீபத்திய

    ஒரு சிக்கன் நெக்கில் கைவைத்தால் இரண்டு சிக்கன் நெக் பறிபோகும்; பங்களாதேஷுக்கு அசாம் முதல்வர் எச்சரிக்கை பங்களாதேஷ்
    STR 50: முதன்முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கும் சிம்பு! சிலம்பரசன்
    "என் நரம்புகளில் ரத்தம் அல்ல, சிந்தூர் ஓடுகிறது: பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் விலை கொடுத்தே ஆகும் என்று பிரதமர் உறுதி பிரதமர் மோடி
    நீட் முதுகலை மருத்துவ கவுன்சிலிங்கில் முறைகேடுகளை தடுக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு உச்ச நீதிமன்றம்

    பங்களாதேஷ்

    800 மில்லியன் டாலர் கட்டணத்தை செலுத்துங்கள்; பங்களாதேஷுக்கு அதானி நிறுவனம் வலியுறுத்தல் அதானி
    பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி கலிதா ஜியா
    கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்  வங்கதேச அணியின் மூத்த ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் வங்கதேச கிரிக்கெட் அணி
    பங்களாதேஷ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கியது செல்லும்; 1971 ஒப்பந்தத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்

    அசாம்

    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது இந்தியா
    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர் இந்தியா
    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா இந்தியா
    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியா

    இந்தியா

    தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக அறிவிப்பு பல்கலைக்கழகம்
    அந்தர்பல்டியடித்த டொனால்ட் டிரம்ப்; இந்தியா-பாகிஸ்தான் மோதலில்  நேரடி மத்தியஸ்தம் செய்யவில்லை என மறுப்பு டொனால்ட் டிரம்ப்
    துருக்கிக்கு அடுத்த அடி; ஜனாதிபதி எர்டோகன் மகள் நிறுவனத்திற்கு இந்தியாவில் பாதுகாப்பு அனுமதி ரத்து துருக்கி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025