NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'விமான நிலையத்தில் சட்டையை கழற்றச் சொன்னார்கள்': பெண் குற்றசாட்டு!
    இந்தியா

    'விமான நிலையத்தில் சட்டையை கழற்றச் சொன்னார்கள்': பெண் குற்றசாட்டு!

    'விமான நிலையத்தில் சட்டையை கழற்றச் சொன்னார்கள்': பெண் குற்றசாட்டு!
    எழுதியவர் Sindhuja SM
    Jan 05, 2023, 06:01 pm 1 நிமிட வாசிப்பு
    'விமான நிலையத்தில் சட்டையை கழற்றச் சொன்னார்கள்': பெண் குற்றசாட்டு!
    "ஒரு பெண்ணின் உடையை அவிழ்க்க சொல்வதற்கு என்ன தேவை இருக்கிறது?" பாதிக்கப்பட்ட பெண் குற்றசாட்டு

    பெங்களூரு விமான நிலையத்தில் தன்னை வற்புறுத்தி சட்டையை கழற்ற சொன்னதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தும் போது தன்னை வற்புறுத்தி சட்டையை கழற்ற சொல்லி அவமானப்படுத்தியதாக பெண் ஒருவர் தன் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். அகமதாபாத் செல்லும் ஒரு இண்டிகோ விமானத்தில் அந்த பெண் பயணித்திருக்கிறார். இது குறித்து, தன் ட்விட்டர் பக்கத்தில் 'அவமானமாக' இருக்கிறது என்று பதிவிட்டிருந்த அவர், அந்த ட்விட்டர் பதிவு வைரலானதும் பதிவையும் அவரது ட்விட்டர் கணக்கையும் நீக்கிவிட்டார். இந்த விவகாரம் பாதுகாப்புக் குழுக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தின் பாதுகாப்பை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை(CISF) தான் கையாளுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ட்விட்டர் பதிவு மற்றும் பெங்களூரு விமான நிலையத்தின் பதில்:

    "பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையின்போது என் சட்டையைக் கழற்றச் சொன்னார்கள். பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் வெறும் காமிசோலை(உள்ளாடை) மட்டும் அணிந்து கொண்டு பிறரது கவனத்தை ஈர்ப்பது மிகவும் அவமானகரமானது. @BLRAirport ஒரு பெண்ணின் உடையை அவிழ்க்க சொல்வதற்கு என்ன தேவை இருக்கிறது?" என்று பெங்களூரு விமான நிலையத்தின் ட்விட்டர் கணக்கை 'டேக்' செய்து அந்த பெண் பதிவிட்டிருந்தார். ஆனால், நேற்று(ஜன:4) காலை அந்த பதிவு நீக்கப்பட்டிருந்தது. அவரது ட்விட்டர் கணக்கும் அழிக்கப்பட்டிருந்தது. பெங்களூரு விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, "உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது. இதை நாங்கள் எங்கள் செயல்பாட்டுக் குழுவிற்கு எடுத்துரைத்துள்ளோம்" என்று அந்த அழிக்கப்பட்ட ட்விட்டர் பதிவில் பதிலளித்திருந்தது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    இந்தியா

    காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்? தமிழ்நாடு
    ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை? ஜியோ
    RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம் தமிழ்நாடு
    இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம் கர்நாடகா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023