NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'விமான நிலையத்தில் சட்டையை கழற்றச் சொன்னார்கள்': பெண் குற்றசாட்டு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    'விமான நிலையத்தில் சட்டையை கழற்றச் சொன்னார்கள்': பெண் குற்றசாட்டு!
    "ஒரு பெண்ணின் உடையை அவிழ்க்க சொல்வதற்கு என்ன தேவை இருக்கிறது?" பாதிக்கப்பட்ட பெண் குற்றசாட்டு

    'விமான நிலையத்தில் சட்டையை கழற்றச் சொன்னார்கள்': பெண் குற்றசாட்டு!

    எழுதியவர் Sindhuja SM
    Jan 05, 2023
    06:01 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரு விமான நிலையத்தில் தன்னை வற்புறுத்தி சட்டையை கழற்ற சொன்னதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தும் போது தன்னை வற்புறுத்தி சட்டையை கழற்ற சொல்லி அவமானப்படுத்தியதாக பெண் ஒருவர் தன் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.

    அகமதாபாத் செல்லும் ஒரு இண்டிகோ விமானத்தில் அந்த பெண் பயணித்திருக்கிறார்.

    இது குறித்து, தன் ட்விட்டர் பக்கத்தில் 'அவமானமாக' இருக்கிறது என்று பதிவிட்டிருந்த அவர், அந்த ட்விட்டர் பதிவு வைரலானதும் பதிவையும் அவரது ட்விட்டர் கணக்கையும் நீக்கிவிட்டார்.

    இந்த விவகாரம் பாதுகாப்புக் குழுக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தின் பாதுகாப்பை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை(CISF) தான் கையாளுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    டிவிட்டர்

    ட்விட்டர் பதிவு மற்றும் பெங்களூரு விமான நிலையத்தின் பதில்:

    "பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையின்போது என் சட்டையைக் கழற்றச் சொன்னார்கள். பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் வெறும் காமிசோலை(உள்ளாடை) மட்டும் அணிந்து கொண்டு பிறரது கவனத்தை ஈர்ப்பது மிகவும் அவமானகரமானது. @BLRAirport ஒரு பெண்ணின் உடையை அவிழ்க்க சொல்வதற்கு என்ன தேவை இருக்கிறது?" என்று பெங்களூரு விமான நிலையத்தின் ட்விட்டர் கணக்கை 'டேக்' செய்து அந்த பெண் பதிவிட்டிருந்தார்.

    ஆனால், நேற்று(ஜன:4) காலை அந்த பதிவு நீக்கப்பட்டிருந்தது. அவரது ட்விட்டர் கணக்கும் அழிக்கப்பட்டிருந்தது.

    பெங்களூரு விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, "உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது. இதை நாங்கள் எங்கள் செயல்பாட்டுக் குழுவிற்கு எடுத்துரைத்துள்ளோம்" என்று அந்த அழிக்கப்பட்ட ட்விட்டர் பதிவில் பதிலளித்திருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    தொழில்முனைவில் முன்னணியில் இருக்கும் தமிழக பெண்கள்! தமிழ்நாடு
    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உயிரிழந்தார்! மோடி
    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம் தேர்தல்
    365 நாளில் 3330 முறை உணவு ஆர்டர் செய்த இளைஞர்! டிரெண்டிங் கதை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025