NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கானைக் கட்டாயப்படுத்தி பணம் கொடுக்க வைத்த செல்ஃபி! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கானைக் கட்டாயப்படுத்தி பணம் கொடுக்க வைத்த செல்ஃபி! 
    ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கு

    ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கானைக் கட்டாயப்படுத்தி பணம் கொடுக்க வைத்த செல்ஃபி! 

    எழுதியவர் Arul Jothe
    May 16, 2023
    03:03 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனை திட்டமிட்டு போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்த சம்பவம் குறித்து பரபரப்பான தகவல் வெளியாகி வருகிறது.

    இதில், பணம் கொடுக்க வைப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு செல்ஃபியே, இப்போது காவல்துறை அதிகாரி செய்த பிளாக்மெயிலைக் கண்டறிய உதவியுள்ளது.

    ஆர்யன்கானை விடுவிக்க சமீர் வான்கடே ரூ.25 கோடியை லஞ்சமாக பெற்றுள்ளார் என குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

    FIR-ன் படி ஆர்யன் கான் NCB அலுவலகத்திற்கு KP கோசாவியின் தனிப்பட்ட வாகனத்தில் கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது.

    மேலும் ஆர்யன் கானுடன் KP கோசாவி எடுத்த செல்ஃபி வைரலானது, அவர் NCB அதிகாரிகளின் காவலில் இருந்தபோது கிளிக் செய்ததாக கூறப்படுகிறது.

    இதற்கு கேபி கோசாவிக்கு சுதந்திரம் இருந்ததாகவும், செல்பி எடுத்ததாகவும், ஆர்யன் கானின் குரல் குறிப்பை பதிவு செய்ததாகவும் சிபிஐ எஃப்ஐஆர் கூறியுள்ளது.

    Aryan khan

    லஞ்ச ஊழல் வழக்கு பதிவு

    சமீர் வான்கடேவின் சார்பாக கே.பி.கோசாவி ஆர்யன்கானை போதை வழக்கில் சிக்க வைக்காமல் இருக்க, மிரட்டி ரூ.25 கோடியை லஞ்சமாக வாங்க முயன்றதாகத் தெரியவந்துள்ளது.

    இதில் அப்போதைய புலனாய்வு அதிகாரி ஆஷிஷ் ரஞ்சன், கே.பி.கோசாவி மற்றும் டிசோசா கூட்டாளிகள் ஆவர். இதனால் சிபிஐ அதிகாரிகள், சமீர் வான்கடே மீது லஞ்ச ஊழல் வழக்கைப் பதிவு செய்தனர்.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கானை சிக்க வைக்காமல் இருக்க ரூ.18 கோடியை சமீர் வான்கடே உள்ளிட்டோர் லஞ்சமாக பெற்றதாகவும், அதில் ரூ.50 லட்சத்தை கோசாவியும், சான்வில் டிசோசாவும் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    எப்ஐஆர் பதிவு செய்த பின்னர் இந்த வழக்கு தொடர்பாக சமீர் வான்கடேவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாலிவுட்
    இந்தியா

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    பாலிவுட்

    'The Big Bang Theory'யில், மாதுரி தீட்சித் பற்றி இழிவான கருத்துக்கள்: நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் நெட்ஃபிலிக்ஸ்
    ஆஞ்சியோபிளாஸ்ட்டி செய்து ஒரு மாதம் நிறைவானதை, கொண்டாடிய சுஷ்மிதா சென் ட்ரெண்டிங் வீடியோ
    "ஹிந்தி படவுலகை விட, தென்னிந்திய சினிமாவில் ஒழுக்கமும், நெறிமுறைகளும் உள்ளது": காஜல் அகர்வால் கோலிவுட்
    பிரபல பாலிவுட் நடிகை ரேகாவின் அழகின் ரகசியம் வெளியாகியுள்ளது அழகு குறிப்புகள்

    இந்தியா

    இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யவிருக்கும் சுஸூகி மோட்டார் நிறுவனம்! ஆட்டோமொபைல்
    சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது  கேரளா
    இந்தியாவில் ஒரே நாளில் 1,580 கொரோனா பாதிப்பு: 17 பேர் உயிரிழப்பு கொரோனா
    வாட்ஸ்அப்பில் அதிகரிக்கும் சர்வதேச ஸ்பேம் கால்கள்.. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது வாட்ஸ்அப்? வாட்ஸ்அப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025