Page Loader
டெல்லி ஜல் போர்டு வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் 

டெல்லி ஜல் போர்டு வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் 

எழுதியவர் Sindhuja SM
Mar 18, 2024
11:24 am

செய்தி முன்னோட்டம்

டெல்லி ஜல் போர்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கில் ED அனுப்பிய சம்மனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று புறக்கணித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பப்பட்ட சம்மனை சட்டவிரோதம் என்று கூறியுள்ள ஆம் ஆத்மி கட்சி, இது மத்திய அரசின் சதி என்றும் குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி ஜல் போர்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைய நடத்த மார்ச் 18ஆம் தேதி ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்க இயக்குநரகம் நேற்று சம்மன் அனுப்பியது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது வழக்கு இதுவாகும்.

டெல்லி 

மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது சம்மன்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஏற்கனவே 8 முறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் அந்த வழக்கில் 8 முறையும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று அவருக்கு அமலாக்க இயக்குநரகம் மீண்டும் ஒரு புதிய சம்மனை அனுப்பியது. நேற்று அனுப்பிய சம்மனில், டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் மார்ச் 21 ஆம் தேதி ஆஜராகுமாறு ஆம் ஆத்மி கட்சி(ஏஏபி) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்க இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பணமோசடி நடந்தததாக ஆம்-ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது.