NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு 

    மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 10, 2024
    09:45 am

    செய்தி முன்னோட்டம்

    மதுபானக் கொள்கை வழக்கில் தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார்.

    மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் தன்னை அமலாக்க இயக்குநரகம்(ED) கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை நேற்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில், அவர் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சியின்(ஏஏபி) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர், இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் முன் காலை 10.30 மணியளவில் இதற்கான மனுவை தாக்கல் செய்து, அவசர விசாரணையை கோர உள்ளார்

    டெல்லி 

    மதுபானக் கொள்கை ஊழலில் தனிப்பட்ட முறையில் கெஜ்ரிவால் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு 

    தற்போது ரத்து செய்யப்பட்ட மதுபானக் கொள்கையை வகுப்பதிலும், கிக்பேக் கோருவதிலும் கெஜ்ரிவால் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டதாக உயர் நீதிமன்றம் நேற்று குறிப்பிட்டிருந்தது.

    டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பெறப்பட்ட பணத்தை, கோவா மற்றும் பஞ்சாப் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தியதாகவும், டெல்லி முதல்வர் 'சவுத் குரூப்' நிறுவனத்திடமிருந்து பல கோடி ரூபாய் கிக்பேக்காகப் பெற்றதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) மார்ச் 21 அன்று கைது செய்தது. மதுபான ஊழல் செய்த முக்கிய சதிகாரர்களில் கெஜ்ரிவாலும் ஒருவர் என்று அமலாக்க இயக்குனரகம் குற்றம் சாட்டியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    டெல்லி

    ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சி தனது தலைமையகத்தை காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது இந்தியா
    டெல்லி ஜல் போர்டு ஆலையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபர் பலி  அரவிந்த் கெஜ்ரிவால்
    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்பிஐயின் கோரிக்கையை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 4-வது முறையாக சம்மன் அமலாக்கத்துறை
    7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பணம் கொடுத்து பாஜக வாங்க முயன்றதாக குற்றச்சாட்டு  ஆம் ஆத்மி
    பாஜகவில் சேர சொல்லி அக்கட்சி தன்னை கட்டாயப்படுத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு  டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்புடைய 12 இடங்களில் சோதனை டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025