NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நண்பனின் மகளை பல மாதங்களாக பலாத்காரம் செய்த அரசு அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    நண்பனின் மகளை பல மாதங்களாக பலாத்காரம் செய்த அரசு அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை
    பாதிக்கப்பட்ட சிறுமி டெல்லியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

    நண்பனின் மகளை பல மாதங்களாக பலாத்காரம் செய்த அரசு அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    Aug 21, 2023
    01:30 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அரசு அதிகாரி ஒருவர் தனது நண்பரின் 14 வயது மகளை பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து, அந்த சிறுமியை கருவுற செய்ததற்கு எதிராக நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்வதற்காக டெல்லி போலீசார் அந்த அரசு அதிகாரியின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

    குற்றம்சாட்டப்பட்ட அரசு அதிகாரியை சஸ்பெண்ட் செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

    பாதிக்கப்பட்ட சிறுமி டெல்லியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

    2020 ஆம் ஆண்டு அந்த சிறுமியின் தந்தை இறந்துவிட்டதால், அவர் குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரியின் வீட்டில் தான் வசித்து வந்தார்.

    டொய்க்

    போக்சோ சட்டத்தின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது

    குற்றம் சாட்டப்பட்டவர் நவம்பர் 2020 முதல் ஜனவரி 2021 வரை பாதிக்கப்பட்ட சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

    இதனால், மன அழுத்தத்திற்கு உள்ளான சிறுமி ஒரு வாரத்திற்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சிறுமியின் பிரச்சனையை தெரிந்து கொண்ட உளவியல் மருத்துவர்கள் காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு கருவுற்ற சிறுமிக்கு குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது மனைவி கரு கலைப்பு செய்ததாகவும் FIRரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்
    பலாத்காரம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    டெல்லி

    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    லடாக் கனமழை எதிரொலி - 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது  லடாக்
    'பிரிஜ் பூஷனை தண்டிக்க தேவையான ஆதாரங்கள் இருக்கிறது': டெல்லி காவல்துறை  பிரிஜ் பூஷன் சரண் சிங்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  வெள்ளம்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் பாஜக
    அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு டெல்லி
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா

    பலாத்காரம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025