NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் 
    ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம்

    ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் 

    எழுதியவர் Nivetha P
    Dec 13, 2023
    02:04 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் தான் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம்.

    இந்நிறுவனம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து முதலீடு செய்த ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை ஏமாற்றி ரூ.2,438 கோடி பணத்தினை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த மோசடி வழக்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இதில் சம்மந்தப்பட்டதாக கூறப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேற்று(டிச.,12) சென்னை அசோக் நகரிலுள்ள மாநில பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.

    அவரிடம் அதிகாரிகள் 7 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 'ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கிற்கும், எனக்கும் எவ்வித சம்மந்தமுமில்லை' என்று தெரிவித்தார்.

    விசாரணை 

    இன்று நடக்கும் விசாரணையில் உண்மை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    தொடர்ந்து, 'மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் வெளிநாட்டில் இருந்தோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்' என்று கூறியிருந்தார்.

    இதனிடையே நேற்றைய விசாரணையில் முன்னதாக இவ்வழக்கில் கைதான ரூசோவிடமிருந்து ஆர்.கே.சுரேஷ் ரூ.15கோடி பணத்தினை பெற்றது தெரியவந்துள்ளது.

    'ஒயிட் ரோஸ்' என்னும் படத்திற்காக தயாரிப்பாளர் ரூசோவிடம் இருந்து பணம் பெற்றதாக ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஆனால் அந்த பணம் திரைப்பட தயாரிப்பிற்கு மட்டுமின்றி தனது சொந்த செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

    இதனால், இதுத்தொடர்பான ஆவணங்களோடு ஆஜராகும்படி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை உத்தரவிட்டனர்.

    அதன்படி ஆர்.கே.சுரேஷ் இன்றும்(டிச.,13)விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

    இதன் உண்மை இன்று நடக்கும் விசாரணையில் தெரியவரும்.

    ஆர்.கே.சுரேஷிடம் நடத்தப்படும் விசாரணை குறித்த அறிக்கையினை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வரும் 18ம்.,தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    முதலீடு
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    சென்னை

    மிக்ஜாம் புயல் எதிரொலி: குறைகேட்க வந்த அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள் தமிழக அரசு
    சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் 6 தாலுகாக்களில், நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை
    சென்னை மழை குறித்து தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கூறுவது என்ன? புயல் எச்சரிக்கை
    வெள்ள நிவாரண பணிகளை முடிக்கிவிட்டுள்ள தமிழக அரசு; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை  வெள்ளம்

    முதலீடு

    FTX தளத்தில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய நிஷாத் சிங் யார் இவர்? தொழில்நுட்பம்
    பெண்கள் அதிகம் முதலீடு செய்வது எங்கு தெரியுமா? ஆய்வறிக்கை முதலீட்டு திட்டங்கள்
    27% பெண்கள் மட்டுமே சொந்தமாக நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள் இந்தியா
    கிரிசில் ரேட்டிங் வெளியிட்ட சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் முதலீட்டு திட்டங்கள்

    காவல்துறை

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் நினைவாக நினைவுச்சின்னம் அமைப்பு விபத்து
    விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை  விருதுநகர்
    Explained- தமிழ்நாட்டில் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக என்ன சர்ச்சை? திருவண்ணாமலை
    காலணியை துடைக்க வைத்து இஸ்லாமிய மாணவியை இழிவுபடுத்திய ஆசிரியை: கோவையில் பரபரப்பு  கோவை

    காவல்துறை

    'மன்சூர் அலிகான் மோசமானவர் இல்லை' - ஆதரவு தெரிவிக்கும் சீமான்  சீமான்
    பள்ளி குழந்தைகளோடு சென்ற ஆட்டோ, லாரி மீது மோதி விபத்து; வைரலாகும் வீடியோ ஆந்திரா
    பஞ்சாப் குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு: காவலர் ஒருவர் கொல்லப்பட்டார், 3 பேர் காயம் பஞ்சாப்
    தொண்டை வலியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை- காவல்துறையினருக்கு மன்சூர் அலிகான் கடிதம் மன்சூர் அலிகான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025