NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமலாக்க இயக்குனரகம் முன், இன்று ஆஜராகவுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்; கைது செய்யப்படலாம் என AAP சந்தேகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமலாக்க இயக்குனரகம் முன், இன்று ஆஜராகவுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்; கைது செய்யப்படலாம் என AAP சந்தேகம்
    அமலாக்க இயக்குனரகம் முன், இன்று ஆஜராகவுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்; கைது செய்யப்படலாம் என AAP சந்தேகம்

    அமலாக்க இயக்குனரகம் முன், இன்று ஆஜராகவுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்; கைது செய்யப்படலாம் என AAP சந்தேகம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 02, 2023
    08:55 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், இன்று காலை 11 மணிக்கு அமலாக்க இயக்குனரகம் முன் ஆஜராக சம்மன் அனுப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விசாரணைக்கு ஆஜராவார் என்று கூறப்படுகிறது.

    எனினும், விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்படலாம் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.

    கடந்த திங்கட்கிழமை, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மணீஷ் சிசோடியாவின், ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்த சில மணி நேரங்களில், இந்த வழக்கில் பணமோசடி கோணத்தை விசாரிக்கும் அமலாக்கத்துறையினரால், டெல்லி முதல்வருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    இந்த வழக்கில், சட்டவிரோதமாக 338 கோடி பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

    card 2

    மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்கட்சிகள் கண்டனம்

    இந்த விவகாரம் குறித்து புதன்கிழமை பேசிய மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, "அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன், அனைத்து எதிர்க்கட்சிகளின் குரலையும் ஒடுக்க அவர்கள் (பாஜக) முயற்சிக்கின்றனர். தேர்தலுக்கு முன் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். அதனால் அவர்கள் சதி செய்கிறார்கள்." எனக்கூறினார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் நிச்சயம் கைது செய்யப்படுவர் என அக்கட்சியின் அமைச்சர் அதிஷியும் கூறினார்.

    அவர் விசாரணைக்குப் பிறகு காவலில் எடுக்கப்படுவார் என்றும், அதற்கு காரணம், கெஜ்ரிவால், ஆளும் பாஜகவுக்கு எதிராக பேசியதற்காக மட்டுமே அன்றி, அவருக்கு எதிராக வேறு எந்த ஆதாரமும் இல்லை என கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரவிந்த் கெஜ்ரிவால்
    அமலாக்க இயக்குநரகம்
    அமலாக்கத்துறை
    டெல்லி

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் பாஜக
    அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு டெல்லி
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு

    அமலாக்கத்துறை

    திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை  ட்விட்டர்
    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - அக்.,30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை  செந்தில் பாலாஜி

    டெல்லி

    தனது பிறந்தநாளில் யஷோபூமி மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    மெட்ரோ ரயிலில் மோடி: பிறந்தநாளை மக்களுடன் மக்களாக கொண்டாடினார் பிரதமர்   பிரதமர் மோடி
    ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக மாறிய ராகுல் காந்தி ராகுல் காந்தி
    டெல்லியில் தச்சர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025