NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை
    இந்தியா

    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை

    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை
    எழுதியவர் Nivetha P
    Jan 07, 2023, 05:48 pm 1 நிமிட வாசிப்பு
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை
    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி

    பெங்களூர் ராஜாஜி நகரில், என்.பி.எஸ். என்னும் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு பணிபுரிவோர் நேற்று காலை 11.30 மணியளவில் இ-மெயில்'களை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வந்திருந்த ஒரு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டிருந்தது. அதில் 'பள்ளி வளாகத்தில் நான்கு ஜெலட்டின் குச்சிகள் வைக்கப்பட்டுள்ளது, அவைகள் வெடித்து சிதறும்' என்று குறிப்பிட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி ஊழியர்கள் பசவேஸ்வர நகர் போலிஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலை பெற்ற போலீசார் உடனடியாக அங்கு வந்தனர்.

    பள்ளியை ஆய்வு செய்த வெடிகுண்டு செயலிழப்பு குழு மற்றும் மோப்ப நாய் குழுவினர்

    பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையாக அங்கு வந்த போலீசார் பள்ளி வளாகத்திற்குள்ளே இருந்த மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு மற்றும் மோப்ப நாய் குழுவினர் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஆய்வு செய்ததில் எதுவும் கிடைக்கவில்லை. இதன் பின்னரே, வெடிகுண்டு மிரட்டல் உண்மையல்ல என்பது தெரியவந்தது. மிரட்டல் வந்த இ-மெயில் முகவரியை வைத்து போலீசார் விசாரித்ததில் மற்றொரு பள்ளியை சேர்ந்த மாணவன் விளைவுகள் அறியாமல் விளையாட்டாக மிரட்டி இ-மெயில் அனுப்பியது தெரியவந்துள்ளது. இது குறித்த அறிக்கை சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அதனடிப்படையில் தான் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணை காவல் ஆணையாளர் லட்சுமண் தெரிவித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    காவல்துறை

    சமீபத்திய

    கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - அதிகரிக்கும் கொரோனா பரவல் கொரோனா
    மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ராகுல் காந்தி
    ராகுல்காந்திக்கு சிறை தண்டனை - எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ்
    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்

    இந்தியா

    அதிரடியாக 2,200 பேர் பணிநீக்கம் செய்த Indeed நிறுவனம்! காரணம் என்ன? ஆட்குறைப்பு
    தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு தமிழ்நாடு
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1,300 பாதிப்புகள் கொரோனா
    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா அமெரிக்கா

    காவல்துறை

    சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது சென்னை
    பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு இந்தியா
    தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம் கோவை
    தமிழ்நாடு பெண் காவலர்களின் நலம் சார்ந்த 9 அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023