NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை
    அடுத்த செய்திக் கட்டுரை
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை
    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி

    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை

    எழுதியவர் Nivetha P
    Jan 07, 2023
    05:48 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூர் ராஜாஜி நகரில், என்.பி.எஸ். என்னும் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

    அங்கு பணிபுரிவோர் நேற்று காலை 11.30 மணியளவில் இ-மெயில்'களை பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வந்திருந்த ஒரு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டிருந்தது.

    அதில் 'பள்ளி வளாகத்தில் நான்கு ஜெலட்டின் குச்சிகள் வைக்கப்பட்டுள்ளது, அவைகள் வெடித்து சிதறும்' என்று குறிப்பிட்டிருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி ஊழியர்கள் பசவேஸ்வர நகர் போலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

    தகவலை பெற்ற போலீசார் உடனடியாக அங்கு வந்தனர்.

    சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளிக்கு அறிக்கை

    பள்ளியை ஆய்வு செய்த வெடிகுண்டு செயலிழப்பு குழு மற்றும் மோப்ப நாய் குழுவினர்

    பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையாக அங்கு வந்த போலீசார் பள்ளி வளாகத்திற்குள்ளே இருந்த மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு மற்றும் மோப்ப நாய் குழுவினர் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    ஆய்வு செய்ததில் எதுவும் கிடைக்கவில்லை.

    இதன் பின்னரே, வெடிகுண்டு மிரட்டல் உண்மையல்ல என்பது தெரியவந்தது.

    மிரட்டல் வந்த இ-மெயில் முகவரியை வைத்து போலீசார் விசாரித்ததில் மற்றொரு பள்ளியை சேர்ந்த மாணவன் விளைவுகள் அறியாமல் விளையாட்டாக மிரட்டி இ-மெயில் அனுப்பியது தெரியவந்துள்ளது.

    இது குறித்த அறிக்கை சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

    அதனடிப்படையில் தான் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணை காவல் ஆணையாளர் லட்சுமண் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவல்துறை
    இந்தியா

    சமீபத்திய

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா

    இந்தியா

    பண மதிப்பிழப்பு: தனியாளாக தன் கருத்தை முன் வைத்த நீதிபதி! இந்தியா
    மாமல்லபுரத்திற்கு வந்து 'மாஸ்' காட்டிய மத்திய பிரதேச முதலமைச்சர்! இந்தியா
    பண மதிப்பிழப்பு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு இந்தியா
    பஞ்சாப் முதலமைச்சர் வீடு அருகே வெடிகுண்டு! இந்திய மாநிலங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025