NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம்
    அன்பு ஜோதி ஆசிரமம் - தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம்

    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம்

    எழுதியவர் Nivetha P
    Mar 23, 2023
    02:11 pm

    செய்தி முன்னோட்டம்

    விழுப்புரம் விக்கிரவாண்டி அடுத்துள்ள குண்டலிப்புலியூர் கிராமத்தில் அன்புஜோதி என்னும் ஆசிரமம் பல வருடங்களாக இயங்கி வந்துள்ளது.

    இதில் ஆதரவற்றோர், மனநலம் பாதித்தோர் தங்கியிருந்தனர். இங்கு தங்கியுள்ளோர் மாயமான முறையில் காணாமல் போவதாக புகார்கள் எழுந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் உரிய சான்றிதழ்கள் எதுவுமின்றி இந்த ஆசிரமம் செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

    மேலும் அங்கு தங்கியிருந்தோர் மிக மோசமான முறையில் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள் என்றும், பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து ஆசிரமத்தில் இருந்தோரை சிகிச்சைக்காக மருத்துவமனையிலும், பின்னர் வேறு சில காப்பகங்களிலும் தங்க வைக்கப்பட்டனர்.

    ஆசிரம நிர்வாகிகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

    தீவிரமாக தேடுதல்

    ஜன்னல் வழியே குதித்து தப்பியோட்டம்

    தற்போது இந்த வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் அந்த ஆசிரமத்தில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கடலூரில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கடந்த மாதம் 18ம் தேதி கடலூரில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் சுமார் 25 மனநலம் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதில் 5 பேர் காப்பகத்தின் ஜன்னல் வழியே கதவினை உடைத்து போர்வையை கயிறு போல் செய்து அதன் உதவியோடு கீழே குதித்து தப்பி ஓடியுள்ளார்கள்.

    இச்செய்தியினை காப்பக ஊழியர்கள் உடனடியாக போலீசுக்கு தெரிவித்தனர்.

    தப்பியோடிய அந்த 5 பேரையும் போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விழுப்புரம்
    கடலூர்

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை
    13 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் கிளென் மேக்ஸ்வெல்: ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்
    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை

    விழுப்புரம்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் தமிழ்நாடு
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தமிழ்நாடு
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு

    கடலூர்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு பாமக
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு பாமக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025