NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்
    இந்தியா

    விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

    விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்
    எழுதியவர் Nivetha P
    Mar 21, 2023, 07:13 pm 0 நிமிட வாசிப்பு
    விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்
    விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

    விழுப்புரம், கெடார் அருகே அன்புஜோதி என்னும் ஆசிரமம் 18ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிவந்துள்ளது. அங்கு தங்கியிருந்த ஆதரவற்றோர், மனநலம் சரியில்லாதோரை கொடுமை செய்வதாகவும், மர்மமான முறையில் அங்கு தங்கியுள்ளோர் காணாமல் போவதாகவும் புகார்கள் எழுந்தது. இந்த புகார்களின் அடிப்படையில் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், மேலாளர் பிஜோமோன் மற்றும் ஆசிரம பணியாளர்கள் என மொத்தம் 9 பேர் 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அத்துடன் அங்கிருந்து 140 பேரை மீட்டு வேறு காப்பகங்களிலும், சிகிச்சை தேவைப்பட்டோரை அரசு மருத்துவமனைகளிலும் போலீசார் சேர்த்தனர்.

    25 ஆண்டுகளாக நடத்தி வரும் தங்களுக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

    தமிழ்நாடு முழுவதும் இந்த வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆசிரம நிர்வாகியான ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்ளிட்டோர் ஜாமீன் கோரியுள்ள இந்த 7 பேரில் அடங்குவர். அவர்கள் கோரியுள்ள ஜாமீன் மனுவில் அனைத்து உரிமங்களும், சான்றுகளும் பெற்று 25 ஆண்டுகளாக நடத்தி வரும் தங்களுக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்றம்
    விழுப்புரம்

    தமிழ்நாடு

    தமிழக வேளாண் பட்ஜெட்'டினை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பட்ஜெட் 2023
    வானிலை அறிக்கை: மார்ச் 21- மார்ச் 25 புதுச்சேரி
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் கொள்ளையடித்த கில்லாடி பெண்; போலீஸார் கைது வைரல் செய்தி
    அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24.80 லட்சம் மோசடி செய்த நபர் கைது மாவட்ட செய்திகள்

    சென்னை உயர் நீதிமன்றம்

    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு எடப்பாடி கே பழனிசாமி
    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - நாளை மறுநாள் விசாரணை ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொது செயலாளர் தேர்தல் - தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு அதிமுக
    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நேர்ந்த 2 தற்கொலைகள் - சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு

    விழுப்புரம்

    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - போதைப்பொருள் கொடுத்து மதமாற்றம் செய்ததாக புது குற்றச்சாட்டு தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்-தமிழக டிஜிபி'க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் மாவட்ட செய்திகள்
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - பாதிக்கப்பட்ட பெண் பகீர் வாக்குமூலம் தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - காணாமல் போனோர் புகைப்படம் வெளியிட்டு விசாரணை தமிழ்நாடு செய்தி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023