NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம் 
    இந்தியா

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம் 

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம் 
    எழுதியவர் Sindhuja SM
    May 25, 2023, 03:02 pm 1 நிமிட வாசிப்பு
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம் 
    அரசியலமைப்பு மண்டபம், இந்த கட்டிடத்தின் மற்றொரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

    வரும் ஞாயிற்று கிழமை புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில், அந்த கட்டிடத்திற்கு புதிய பெயர் சூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மூன்று நுழைவாயில்கள் இருக்கும். இந்த நுழைவாயில்களுக்கு கியான் துவார், சக்தி துவார் மற்றும் கர்ம துவார் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், பழைய நாடாளுமன்ற கட்டிடம் 'பார்லிமென்ட் ஹவுஸ்' என்று அழைக்கப்பட்டது. அதை போல் இல்லாமல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் சூட்டப்பட வாய்ப்பிருக்கிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளன. தற்போதைய பாஜக அரசு, கடந்த செப்டம்பரில் 'காலனித்துவ மனநிலையை' நீக்குவதாக கூறி குடியரசு தலைவர் மாளிகைக்கு செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாலையான 'ராஜ்பாத்தின்' பெயரைக் கூட 'கர்தவ்யாபத்' என்று மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

     புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பம்சங்கள் 

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மகாத்மா காந்தி, சாணக்கியர், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் போன்ற முக்கிய தலைவர்களின் கிரானைட் சிலைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானம் ஜனவரி 15, 2021 அன்று தொடங்கி, ஆகஸ்ட் 2022 வரை நடைபெறும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய நான்கு மாடி கட்டிடத்தில் 1,224 எம்.பி.க்கள் தங்கலாம். இந்த கட்டிடத்தில் எம்.பி.க்கள், விஐபிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு தனித்தனி நுழைவு வாயில் இருக்கும். அரசியலமைப்பு மண்டபம், இந்த கட்டிடத்தின் மற்றொரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இது நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் அசல் பதிப்பு, அரசியலமைப்பு மண்டபத்தில் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    பாஜக
    நாடாளுமன்றம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    'அடுத்த ஐபிஎல்லிலும் விளையாடுவேன்' : ஓய்வு குறித்த கேள்விக்கு எம்எஸ் தோனி நறுக் பதில் எம்எஸ் தோனி
    ஐபிஎல் 2023 : விருது வென்றவர்களின் முழு பட்டியல் ஐபிஎல்
    ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : கடைசி பந்துவரை திக்திக்! குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஐந்தாவது பட்டத்தை கைப்பற்றியது சிஎஸ்கே! ஐபிஎல்
    விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் ஷுப்மன் கில்! விராட் கோலி

    இந்தியா

    'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா! மல்யுத்தம்
    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    காயம் காரணமாக FBK போட்டியிலிருந்து விலகினார் நீரஜ் சோப்ரா! இந்திய அணி
    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA உயர்நீதிமன்றம்

    பாஜக

    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  இந்தியா
    புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக  இந்தியா
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள்  இந்தியா

    நாடாளுமன்றம்

    புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி  இந்தியா
    புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கும்: வெளியிடப்பட்ட முதல் வீடியோ  இந்தியா
    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் இந்தியா

    மத்திய அரசு

    தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்! தமிழகம்
    செந்தில் பாலாஜி உறவினர்கள் இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை  தமிழ்நாடு
    புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி கொண்டு திறக்கப்படவேண்டும் - பொதுநல வழக்கு  பிரதமர் மோடி
    மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால்  இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023