NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம் 
    அரசியலமைப்பு மண்டபம், இந்த கட்டிடத்தின் மற்றொரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம் 

    எழுதியவர் Sindhuja SM
    May 25, 2023
    03:02 pm

    செய்தி முன்னோட்டம்

    வரும் ஞாயிற்று கிழமை புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில், அந்த கட்டிடத்திற்கு புதிய பெயர் சூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மூன்று நுழைவாயில்கள் இருக்கும். இந்த நுழைவாயில்களுக்கு கியான் துவார், சக்தி துவார் மற்றும் கர்ம துவார் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    மேலும், பழைய நாடாளுமன்ற கட்டிடம் 'பார்லிமென்ட் ஹவுஸ்' என்று அழைக்கப்பட்டது. அதை போல் இல்லாமல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் சூட்டப்பட வாய்ப்பிருக்கிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

    தற்போதைய பாஜக அரசு, கடந்த செப்டம்பரில் 'காலனித்துவ மனநிலையை' நீக்குவதாக கூறி குடியரசு தலைவர் மாளிகைக்கு செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாலையான 'ராஜ்பாத்தின்' பெயரைக் கூட 'கர்தவ்யாபத்' என்று மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

    details

     புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பம்சங்கள் 

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மகாத்மா காந்தி, சாணக்கியர், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் போன்ற முக்கிய தலைவர்களின் கிரானைட் சிலைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானம் ஜனவரி 15, 2021 அன்று தொடங்கி, ஆகஸ்ட் 2022 வரை நடைபெறும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.

    64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய நான்கு மாடி கட்டிடத்தில் 1,224 எம்.பி.க்கள் தங்கலாம்.

    இந்த கட்டிடத்தில் எம்.பி.க்கள், விஐபிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு தனித்தனி நுழைவு வாயில் இருக்கும்.

    அரசியலமைப்பு மண்டபம், இந்த கட்டிடத்தின் மற்றொரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

    இது நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் அசல் பதிப்பு, அரசியலமைப்பு மண்டபத்தில் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    நாடாளுமன்றம்
    பாஜக
    மத்திய அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    கர்நாடகாவில் புதிதாக பதவியேற்ற 9 அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்: ADR அறிக்கை கர்நாடகா
    ரூ.2000 நோட்டுக்களை அரசு பேருந்துகளில் பயணிகள் மாற்றலாம் - தமிழக போக்குவரத்துத்துறை தமிழ்நாடு
    ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி: முக்கிய தொழிலதிபர்களுடன் சந்திப்பு  ஆஸ்திரேலியா
    இன்று முதல் வங்கிகளில் '2000 ரூபாய் நோட்டு'க்களை மாற்றும் செயல்முறை துவக்கம்! ரிசர்வ் வங்கி

    நாடாளுமன்றம்

    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி

    பாஜக

    WFI தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மல்யுத்த வீரர்கள் இந்தியா
    ராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்கால தடை: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    கேரளாவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    காங்கிரஸ் வென்றால் கர்நாடகா கலவர பூமியாக மாறும்: அமித்ஷா இந்தியா

    மத்திய அரசு

    ஒரே பாலின திருமணங்கள்: மத்திய அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி அளித்த பதில்  இந்தியா
    சினிமாத்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்திய 'ஒளிப்பதிவு திருத்த மசோதா': ஒரு சிறு பார்வை  ஓடிடி
    குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ரூ.6,000 கோடி.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!  இந்தியா
    சூடனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு செல்ல வேண்டாம்: இந்திய அரசு எச்சரிக்கை  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025