NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதிவியேற்றார் அஜித் பவார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதிவியேற்றார் அஜித் பவார் 
    அவர், இந்த பதவியை பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் பகிர்ந்து கொள்வார்

    மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதிவியேற்றார் அஜித் பவார் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 02, 2023
    03:24 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை(NCP) சேர்ந்த அஜித் பவார் உட்பட 9 எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜக தலைமையிலான மாநில அரசுடன் இணைந்தனர்.

    பாஜக ஆட்சியில் உள்ள மகாராஷ்டிராவில் நடைபெறும் மிகப்பெரும் அரசியல் மாற்றமாக இது பார்க்கப்படுகிறது.

    மகாராஷ்டிராவின் முக்கிய எதிர்கட்சி தலைவரான அஜித் பவார், பாஜகவுடன் கைகோர்த்ததை அடுத்து, அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    அவர், இந்த பதவியை பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் பகிர்ந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்ட்டுள்ளது.

    ஆளுநர் மாளிகையில் நடந்த பதியேற்பு விழாவில் அஜித் பவாருடன் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உட்பட மொத்தம் 9 NCP தலைவர்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    நிசக்ஜச

    இன்று காலை அஜித் பவார் NCP எம்எல்ஏக்களை சந்தித்து பேசினார்

    மகாராஷ்டிர சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக அஜித் பவார் சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தற்போது இந்த மிகப்பெரும் அரசியல் மாற்றம் அம்மாநிலத்தில் நடந்துள்ளது.

    மகாராஷ்டிராவில் மொத்தம் 53 NCP எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் 30 பேர் அஜித் பவாருக்கு ஆதரவளிக்கின்றனர்.

    ஆனால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் விதிகளில் இருந்து தப்பிக்க அவருக்கு 36க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது.

    இதனையடுத்து, மும்பையில் உள்ள தனது இல்லத்தில் அஜித் பவார் சில கட்சி தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து மிக முக்கிய NCP தலைவரான சரத் பவாருக்கு தெரிவிக்கப்படவில்லை.

    இந்த சந்திப்பை அடுத்து, அஜித் பவார் ஆளும் பாஜகவுடன் இணைந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    பாஜக

    சமீபத்திய

    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை
    13 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் கிளென் மேக்ஸ்வெல்: ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி இந்தியா
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா

    பாஜக

    சில செய்தி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு உறுதி - டி.கே.சிவகுமார் பேட்டி  காங்கிரஸ்
    'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு  தமிழ்நாடு
    மணிப்பூர் வன்முறை: தொடர்ந்து ஊரை விட்டு வெளியேறும் மக்கள்  இந்தியா
    மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025