NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து
    பயிற்சியின் போது இந்திய விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகி எரிந்தது

    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து

    எழுதியவர் Nivetha P
    Jan 28, 2023
    07:34 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள இந்திய விமானப்படையின் விமான தளத்திலிருந்து இன்று காலை வழக்கம் போல் பயிற்சிக்காக சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 வகையை சேர்ந்த போர் விமானங்கள் புறப்பட்டு சென்றது.

    மொரேனா மாவட்டத்தில் இரண்டு விமானங்களும் அதிவேகமாக பறந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

    அப்போது எதிர்பாரா விதமாக இரண்டு விமானங்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

    இதனை தொடர்ந்து, விபத்துக்குள்ளான விமானங்கள் இரண்டும் தீ பிடித்து எரிய துவங்கியது.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    வழக்கமாக நடந்த பயிற்சியின் பொழுது ஏற்பட்ட இந்த விபத்தில் இந்திய விமானப்படை விமானி ஒருவர் உயிரிழந்ததாக செய்தி நிறுவனம் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ட்விட்டரில் பதிவு

    இந்திய விமானப்படை விமானி உயிரிழந்த சம்பவம்-இரங்கல் தெரிவித்த இந்திய விமானப்படை

    இதேபோல், ராஜஸ்தான் மாநிலம் பாத்பூரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட்விமானம் ஒன்றும் இன்று(ஜன.,28) விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    விமானங்கள் விழுந்த இடங்களில் மீட்புபடைகள் வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்கள்.

    சுகோய் விமானத்தில் இருவரும், மிராஜ் 2000விமானத்தில் ஒருவர் என மொத்தம் 3விமானிகள் பயணித்துள்ளனர்.

    இதில் இருவர் உயிர்தப்பிய நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    இதனைதொடர்ந்து, இரண்டு போர் விமானங்கள் நடுவானில் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை மேற்கொள்ள விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

    இதனிடையே, இதில் உயிரிழந்த விங் கமாண்டர் ஹனுமந்த் ராவ் சாரதியின் குடும்பத்தினருக்கு ஆதரவாக எல்லா வான் போராளிகளும், சகோதரர்களும் நிற்பதாக இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானப்படை
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    விமானப்படை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்

    இந்தியா

    நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட் இந்தியா
    டியோ ஸ்கூட்டருக்கு போட்டியாக அறிமுகமாகும் ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் 2023 - விலை இவ்வளவு கம்மியா? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    வீடியோ: விமான பணிபெண்ணை அவமதிக்கும்படி நடந்து கொண்டதால் பயணி கைது விமானம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025