NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் 30 நாட்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் 30 நாட்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை
    ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை

    ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் 30 நாட்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை

    எழுதியவர் Nivetha P
    Jan 05, 2023
    12:31 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்தது.

    இந்த விமானத்தில் முதல் வகுப்பில் உணவிற்கு பிறகு பயணிகள் தூங்க ஏதுவாக விளக்குகள் அணைக்கப்பட்டப்பொழுது போதையில் இருந்த நபர் ஒருவர், இருக்கையில் அமர்ந்திருந்த பெண் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

    இது குறித்து அப்பெண் விமான ஊழியர்களிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதினார்.

    ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை

    சிறுநீர் கழித்த போதை நபர் 30 நாட்களுக்கு விமானங்களில் பயணம் செய்ய தடை

    அந்த கடிதத்தில் அப்பெண் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து எடுத்துரைத்திருந்தார்.

    இந்த கடிதம் அனுப்பிய பிறகே, சம்பத்தப்பட்ட நபர் 30 நாட்களுக்கு விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

    மேலும் ஏர் இந்தியா சார்பில் அந்த நபர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அந்த புகாரின் பேரில், அந்த நபரை பிடிக்க போலீசார் பல குழுக்களை அமைத்து தேடி வருகிறது.

    இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கும்படி ஏர் இந்தியா விமான நிறுவனத்திடம் மத்திய போக்குவரத்து இயக்குநரகம் கூறியுள்ளது.

    இந்த விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொண்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்

    சமீபத்திய

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா

    விமானம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    இந்தியாவில் நேரம் தவறாத விமான சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ தேர்வு வானூர்தி
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமான சேவைகள்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025