சாகும் வரை தூக்கிலிட்டு கொல்லப்பட்ட கரப்பான் பூச்சி; வைரலாகும் ஏர் இந்தியா விமான பராமரிப்பு பதிவேட்டின் பின்னணி
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தின் அதிகாரப்பூர்வப் பராமரிப்புப் பதிவேட்டில் பதியப்பட்ட ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் பயணிகள் இல்லாத பகுதியில் ஒரு கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டதையும், அது அழிக்கப்பட்டதையும் இந்த ஆவணம் விவரித்துள்ளது. அக்டோபர் 24, வெள்ளிக்கிழமை அன்று AI 315 விமானத்தில் பயணி ஒருவர் கேபினுக்குள் ஒரு உயிருள்ள கரப்பான் பூச்சியைக் கண்டதாகப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுத்த விமானப் பராமரிப்புப் பொறியாளர் அளித்த அதிகாரப்பூர்வ குறிப்புதான் இணையத்தில் நகைச்சுவையாகப் பேசப்படுகிறது. அந்தப் பதிவில், குறையைத் தீர்த்துவிட்டதாக உறுதிப்படுத்திய பொறியாளர், கரப்பான் பூச்சி தூக்கிலிடப்பட்டு இறந்தது (cockroach hanged until death) என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏர் இந்தியா
ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ கருத்து வெளியிடவில்லை
இந்தப் பதிவு பகிரங்கமாக சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, விமான நிறுவனத்தின் ஆவணங்களில் இது மிகவும் மறக்கமுடியாத பதிவுகளில் ஒன்றாகப் பலராலும் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து ஏர் இந்தியா இன்னும் எந்தவொரு அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை. இருப்பினும், இந்தப் பதிவேடு பரவலாகப் பகிரப்படுவது, விமான நிறுவனத்தின் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது. பயணிகளின் தூய்மைக் குறைபாடுகள் பற்றிய புகார்களைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிவந்துள்ளது. அண்மையில், கொழும்பு-சென்னை விமானத்தில் ஒரு பயணிக்கு அளிக்கப்பட்ட சீல் வைக்கப்பட்ட உணவுப் பொட்டலத்தில் முடி இருந்ததைக் கண்டறிந்ததால், சென்னை உயர் நீதிமன்றம் ஏர் இந்தியாவை அலட்சியமாக செயல்பட்டதாகக் கருதி, பயணிகளுக்கு ₹35,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
வைரல் பதிவு
An entry in Air India’s cabin defect log recorded that a live cockroach was discovered by a passenger. The rectification note wryly mentioned that the matter was dealt with… conclusively.
— Jagriti Chandra (@jagritichandra) October 25, 2025
Khalaas, Dubai style pic.twitter.com/sifW6NNtG5