NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதிமுக பாதுகாப்பான கைகளில் இல்லை: சசிகலா
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிமுக பாதுகாப்பான கைகளில் இல்லை: சசிகலா
    2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக சசிகலா அறிவிப்பு

    அதிமுக பாதுகாப்பான கைகளில் இல்லை: சசிகலா

    எழுதியவர் Sindhuja SM
    Feb 25, 2023
    01:50 pm

    செய்தி முன்னோட்டம்

    அதிமுகவில் நிலவி வரும் நெருக்கடிகள் குறித்து பேசிய அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்

    மறைந்த ஜெயலலிதாவின் "நம்பிக்கைக்குரிய" நபரான சசிகலா, இந்தியா டுடேக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், அதிமுக பாதுகாப்பான கைகளில் இல்லை என்றும், ஒரு கட்சிக்கு தொண்டர்களின் பலம் முக்கியம் என்றும், 100 அல்லது 200 பேரால் மட்டும் கட்சியை இயக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

    "மிக விரைவில் அனைவரும் ஒன்றிணைந்து நமது கட்சியின் பழைய பெருமையை மீட்டெடுப்போம். 2024 தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்." என்று தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவர் தெரிவித்தார்.

    அதிமுக

    இந்தியா டுடே பத்திரிகைக்கு வி.கே.சசிகலா அளித்த பதிலகள்

    அதிமுக வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்தது. அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

    உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்த வரையில், இபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்குமான பூசல்தான் அதில் தெரிந்தது. சிவில் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்திருக்கும் மனுவிற்கும் அவர்களின் வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னைப் பொறுத்த வரையில், சிவில் நீதிமன்றத்தின் உத்தரவுதான் முக்கியமானதாக இருக்கும், அதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த முயற்சி செய்வோம்.

    விரைவில் உங்களை சந்திப்பேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

    கண்டிப்பாக. அவர்கள் என்னிடமிருந்து பிரிந்துவிட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை (அவர்களை சந்திப்பதில்) எந்தப் பிரச்சினையும் இல்லை. என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அதிமுக
    ஓ.பன்னீர்செல்வம்
    எடப்பாடி கே பழனிசாமி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அதிமுக

    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி தமிழ்நாடு
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? தமிழக அரசு
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு
    ஈபிஎஸ்-ஒபிஎஸ் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எடப்பாடி கே பழனிசாமி

    ஓ.பன்னீர்செல்வம்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு ஈரோடு

    எடப்பாடி கே பழனிசாமி

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    "பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புது பெயர் வைத்த திமுக!": எதிர்க்கட்சித் தலைவர் காட்டம் தமிழ்நாடு
    ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி - ஓபிஎஸ் அறிவிப்பு தேர்தல்
    ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு ஈரோடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025