NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் மோடி-அதிபர் ஜோ பைடன்: இரு தரப்பு பேச்சு வார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது?
    பிரதமர் மோடி-அதிபர் ஜோ பைடன்: இரு தரப்பு பேச்சு வார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது?
    இந்தியா

    பிரதமர் மோடி-அதிபர் ஜோ பைடன்: இரு தரப்பு பேச்சு வார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது?

    எழுதியவர் Sindhuja SM
    September 09, 2023 | 10:56 am 1 நிமிட வாசிப்பு
    பிரதமர் மோடி-அதிபர் ஜோ பைடன்: இரு தரப்பு பேச்சு வார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது?
    விண்வெளி ஆய்வில் இந்தியாவின் சாதனைகளை அதிபர் பைடன் வாழ்த்தினார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதிபர் ஜோ பைடன் G20 தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று(செப் 8) புது டெல்லி வந்தடைந்தார். இந்த மெகா உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். ஜூன் 2023இல் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது எட்டப்பட்ட ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை பிரதமர் மோடியும் அதிபர் பைடனும் பாராட்டினர். இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின்படி, இரு தலைவர்களும் இந்திய-அமெரிக்க மூலோபாய கூட்டுறவை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

     குவாட் குழுவின் முக்கியத்துவம் குறித்து பேசிய இந்திய-அமெரிக்க தலைவர்கள் 

    இந்தியாவின் G20 பிரசிடென்சியைப் பாராட்டிய அதிபர் பைடன், புது டெல்லியில் நடைபெறும் G20 தலைவர்களின் உச்சிமாநாடு நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு பங்களிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 2024ல் அடுத்த குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டை நடத்த இந்தியா தயாராகி வரும் நிலையில், சுதந்திரமான, திறந்த, உள்ளடக்கிய, மற்றும் மீள்தன்மை கொண்ட இந்தோ-பசிபிக் பகுதியை மேம்படுத்துவதில் குவாட் குழுவின் முக்கியத்துவத்தை இரு தலைவர்கள் உறுதி செய்தனர். வர்த்தக இணைப்பு மற்றும் கடல்சார் போக்குவரத்து தொடர்பான இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சிக்கு இணை-தலைமை தாங்கும் அமெரிக்காவின் முடிவை இந்தியா வரவேற்றது.

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு 

    சீர்திருத்தப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரான இந்தியாவுக்கு அதிபர் பைடன் தனது ஆதரவை தெரிவித்தார். மேலும், 2028-29 ஆம் ஆண்டின் UNSC நிரந்தரமற்ற இடத்திற்கான இந்தியாவின் வேட்புமனுவை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இரு தலைவர்களும் தங்களுடைய கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கான இந்திய-அமெரிக்க முன்முயற்சியை(iCET) ஜோ பைடன் பாராட்டினர். iCETஇன் இடைக்கால மதிப்பாய்வு செப்டம்பர் 2023இல் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சந்திரயான்-3 வெற்றிக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து 

    சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து, விண்வெளி ஆய்வில் இந்தியாவின் சாதனைகளை அதிபர் பைடன் வாழ்த்தினார். மேலும், விண்வெளி ஆய்வில் கூட்டு முயற்சிகளை செய்ய இரு நாடுகளும் விவாதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத் 6ஜி அலையன்ஸ் மற்றும் நெக்ஸ்ட் ஜி அலையன்ஸுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பாதுகாப்பான தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான அர்ப்பணிப்பு அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. விண்வெளி மற்றும் AI போன்ற வளர்ந்து வரும் துறைகளில், தங்களின் முக்கிய பாதுகாப்பு கூட்டாண்மையை ஆழப்படுத்தவும் பன்முகப்படுத்தவும் தலைவர்கள் உறுதியளித்தனர்.

    கார்பன் உமிழ்வை தடுப்பதற்கு உறுதி பூண்ட இந்தியா-அமெரிக்கா 

    மேலும், அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியாவைச் சேர்ப்பதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் பயன்பாட்டை அதிகரிக்க, இரு நாடுகளும் ஆகஸ்ட் 2023இல் இந்தியா-அமெரிக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்கள் செயல் தளத்தை(RE-TAP) தொடங்கின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்பன் உமிழ்வு இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதில் இரு நாட்டு தலைவர்களும் உறுதியாக உள்ளனர். அவர்களின் விவாதத்தின் குறிப்பிடத்தக்க பகுதி போக்குவரத்து துறையை டிகார்பனைசேஷன் செய்வது குறித்து இருந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 10,000 மின்சார பேருந்துகளை வாங்குவது உட்பட, இந்தியாவில் மின்சார போக்குவரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    ஜி20 மாநாடு
    பிரதமர் மோடி
    ஜோ பைடன்
    அமெரிக்கா

    இந்தியா

    ஜி20 மாநாடு - டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியினை நீக்கிய மத்திய அமைச்சகம் பிரதமர் மோடி
    ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு மத்திய அரசு
    50 ஆண்டு வளர்ச்சியை ஆறு ஆண்டுகளில் எட்டிய இந்தியா; உலக வங்கி பாராட்டு உலக வங்கி

    ஜி20 மாநாடு

    ஜி20: உலக தலைவர்களின் மனைவிகளுக்கு அளிக்கப்படும் வரவேற்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள் டெல்லி
    ஜி20 உச்சி மாநாடு - 500 வகை உணவுகள் தயாரிக்க ஏற்பாடுகள் தீவிரம் இந்தியா
    ஜி 20 மாநாடு: உலக தலைவர்களுடன், 15 இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்கிறார்,  பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    ஸ்பெயின் அதிபருக்கு கோவிட் தொற்று; ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிப்பு அமெரிக்கா

    பிரதமர் மோடி

    உலக வளர்ச்சியில் 'ஆசியான்' அமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி பேச்சு  இந்தியா
    'உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும்': பிரதமர் மோடி  திமுக
    பிரதமரின் பாதுகாப்புக்கு பொறுப்பான பாதுகாப்பு குழுவின் இயக்குநர் அருண்குமார் சின்ஹா ​​காலமானார் இந்தியா
    இன்று இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி: ஆசியான் உச்சி மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது? இந்தியா

    ஜோ பைடன்

    ஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் உலகத் தலைவர்கள் தங்க போகும் இடங்கள் ஜி20 மாநாடு
    ஜோ பைடனின் இந்திய பயணத்திற்கு முன்னதாக அவரது மனைவிக்கு திடீர் கொரோனா பாதிப்பு  அமெரிக்கா
    'ஜி20 மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது': ஜோ பைடன்  அமெரிக்கா
    செப்டம்பர் 8ஆம் தேதி நடக்கிறது மோடி-பைடனுக்கு இடையிலான  இருதரப்பு சந்திப்பு இந்தியா

    அமெரிக்கா

    யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு அமெரிக்க இளம் வீராங்கனை தகுதி யுஎஸ் ஓபன்
    செப்டம்பர் 3ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்தது அமெரிக்காவின் லூயிஸ்வில்லே சனாதன தர்மம்
    போருக்கான ஆயுத உதவி: ரஷ்ய அதிபரை சந்திக்க இருக்கிறார் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் ரஷ்யா
    அணுகுண்டு தாக்குதல் பயிற்சி நடத்திய வடகொரியா: பீதியில் அண்டை நாடுகள்  வட கொரியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023