NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீண்டும் செம்மண் நிறமாக மாறிய புதுச்சேரி கடற்கரை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் செம்மண் நிறமாக மாறிய புதுச்சேரி கடற்கரை 
    மீண்டும் செம்மண் நிறமாக மாறிய புதுச்சேரி கடற்கரை

    மீண்டும் செம்மண் நிறமாக மாறிய புதுச்சேரி கடற்கரை 

    எழுதியவர் Nivetha P
    Nov 01, 2023
    04:27 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் விரும்பும் கடற்கரை என்றால் அது புதுச்சேரி கடற்கரை தான்.

    1.2 கி.மீ., நீளம் கொண்ட இந்த கடற்கரையினை 'ராக் பீச்' என்று சுற்றுலா பயணிகள் இதனை அழைப்பதுண்டு.

    நாள்தோறும் இந்த கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி ஏராளமான உள்ளூர் மக்களும் இங்கு வந்து கடலின் அழகை ரசித்து செல்வது வழக்கம்.

    கடந்த 17ம் தேதி புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே, ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு குருசுகுப்பம் என்னும் பகுதி வரை கடல் நீரின் நிறத்தில் மாற்றம் காணப்பட்டது.

    இதனையடுத்து தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்டவை கடல் நீரின் அளவை எடுத்து ஆய்வு செய்துள்ளனர்.

    கடல் 

    நச்சுத்தன்மை அடங்கிய நுண்ணுயிர்கள் பெருக்கம் அதிகமுள்ள காரணத்தினால் நிற மாற்றம் 

    இதில், நச்சுத்தன்மை அடங்கிய நுண்ணுயிர்கள் பெருக்கம் அதிகமுள்ளதால் கடல் மாசு ஏற்பட்டு கடல்நீரின் நிறம் மாறியுள்ளது என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்டவை கடல்நீரின் அளவை எடுத்து ஆய்வுச்செய்துள்ளனர்.

    இதில், நச்சுத்தன்மை அடங்கிய நுண்ணுயிர்கள் பெருக்கம் அதிகமுள்ளதால் கடல்நீரின் நிறம் மாறியுள்ளது என்பது தெரியவந்தது.

    இந்நிலையில், இன்று(நவ.,1)மீண்டும் அதேப்பகுதியினை சேர்ந்த கடல்நீர் செம்மண் நிறமாக மாறியுள்ளது.

    கடந்த 2 வாரத்தில் 3வது முறையாக இவ்வாறு புதுச்சேரி கடற்பகுதியின் ஓர் பகுதி மீண்டும் நிறம் மாறியுள்ளது.

    இதனை கண்டு அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் ஆச்சர்யமடைந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    புதுச்சேரி கடற்பகுதி 

    #WATCH | புதுச்சேரியில் 3வது முறையாக செந்நிறமாக மாறிய கடல்!

    கடலின் நிறம் மாற்றம் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.#SunNews | #Pondicherry pic.twitter.com/beWdUttvIW

    — Sun News (@sunnewstamil) November 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புதுச்சேரி
    கடற்கரை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    புதுச்சேரி

    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    புதுச்சேரி-மாகே பள்ளி கல்லூரிகளுக்கு செப்.24 வரை விடுமுறை நிபா வைரஸ்
    15 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    7 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு

    கடற்கரை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025