NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம்
    தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம்
    இந்தியா

    தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம்

    எழுதியவர் Nivetha P
    April 07, 2023 | 04:56 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம்
    தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம்

    இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் 6,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம். அப்போது கொரோனா பாதிப்பு குறித்து கூறுகையில், தற்போதைய நிலையில் கேரளா மாநிலத்தில் தான் அதிகளவு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவ கட்டமைப்பு குறித்து மாதிரி ஒத்திகை நிகழ்வு நாடு முழுவதும் விரைவில் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    பரிசோதனைகளை அதிகரிக்க மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளதாக தகவல்

    மேலும் பேசிய அவர், விமான நிலையங்களில் ரேண்டம் முறைகளில் 2% பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினந்தோறும் விமான நிலையங்களில் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை கணிசமான முறையில் அதிகரித்து வருவதால், கூடுதல் பரிசோதனைகளை செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் கோரியுள்ளோம் என்று தெரிவித்தார். இதற்கிடையே அவர், தமிழகத்தில் க்ளஸ்டர் பாதிப்பு இல்லை, தனிநபர் பாதிப்பு தான் காணப்படுகிறது. தமிழகத்தில் நாள்தோறும் 4,000 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும் செய்யப்படுகிறது. சிகிச்சைக்கு தேவைப்படும் அளவிற்கு ஆக்சிஜனும் உள்ளது என்று கூறினார். இதனையடுத்து அவரிடம் மீண்டும் லாக்டவுன் தமிழகத்தில் போடப்படுமா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், அந்த நிலைமை எல்லாம் வரவில்லை, லாக்டவுன் இல்லை என்று பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கொரோனா
    சுகாதாரத் துறை
    தமிழ்நாடு
    கோவை

    கொரோனா

    கொரோனா பரவலின் போது 180+ நாடுகளுக்கு இந்தியா உதவியது: சுகாதார அமைச்சர் இந்தியா
    இந்தியாவில் 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 14 உயிரிழப்புகள் இந்தியா
    7 நாட்களில் 3 மடங்கு அதிகரித்த கொரோனா: மத்திய சுகாதார அமைச்சர் இன்று ஆலோசனை இந்தியா
    சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி மீண்டும் துவக்கம் சென்னை

    சுகாதாரத் துறை

    கொரோனா அதிகரிப்பு - தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 11,000ஆக உயர்த்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல் தமிழ்நாடு
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை கொரோனா
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1590 பாதிப்புகள் இந்தியா
    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நலமுடன் உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம் ஈரோடு

    தமிழ்நாடு

    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிக்கை இந்தியா
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஆளுநர் மாளிகை
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் ஆர்.என்.ரவி
    தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் தொடர் மழைக்கு வாய்ப்பு புதுச்சேரி

    கோவை

    GD நாயுடு: மற்றுமொரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் மாதவன் திரைப்பட அறிவிப்பு
    சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவு துவங்கியது வந்தே பாரத்
    கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் - குவியும் பாராட்டுக்கள் தமிழ்நாடு
    சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் இன்று துவங்கியது சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023