NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல் 
    சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல் 
    இந்தியா

    சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல் 

    எழுதியவர் Nivetha P
    April 20, 2023 | 11:20 am 0 நிமிட வாசிப்பு
    சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல் 
    சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல்

    சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் வீலிங் செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அதீத வேகத்தில் செல்வதால் வாகன விபத்துகளும் அதிகரித்து வருகிறது. பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களுக்கு மட்டுமின்றி எதிரில் வரும் அப்பாவி பொதுமக்களும் இதில் சிக்கி மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமீப காலங்களில் பைக் ரேஸில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்த நிலையில், இந்த சம்பவங்கள் சற்று குறைந்தது. தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் இதில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை எடுப்பதோடு, பைக்குகளையும் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார் 

    இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடப்போவதாக தகவல் கிடைத்ததன் பேரில் போக்குவரத்து காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டார்கள். அதன்படி நேற்று(ஏப்ரல்.,19) அதிகாலை 1.30 மணியளவில் சென்னை அண்ணாசாலை, டேம்ஸ் சாலை, வெலிங்டன் சாலை, ஸ்பென்சர் போன்ற முக்கிய பகுதிகளில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சினிமா பாணியில் அந்த இளைஞர்களை விரட்டி, மடக்கி பிடித்துள்ளார்கள். அவர்களிடமிருந்து 16 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட இளைஞர்கள் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்குதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    போக்குவரத்து காவல்துறை
    பைக்

    சென்னை

    சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்  மெரினா கடற்கரை
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணியில் தீயணைப்புத்துறை காவல்துறை
    நெருங்கிய அட்ச திரிதியை... மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை!  வணிக செய்தி
    சென்னை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  தமிழ்நாடு

    போக்குவரத்து காவல்துறை

    வாகன ஸ்கிராப்பிங் 11,000 வாகனங்கள் ரத்து - வெளியிட்ட அரசு! சாலை பாதுகாப்பு விதிகள்
    அரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல் மாவட்ட செய்திகள்
    சென்னையில் மது அருந்தாதவரை அருந்தியதாக காட்டிய ப்ரீத் அனலைசர் மிஷின் விவகாரம் - போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம் சென்னை
    சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல் தமிழ்நாடு

    பைக்

    இந்தியாவில் வெளியானது ட்ரையம்பின் தொடக்க நிலை மாடலான 'ஸ்பீடு 400' பைக் ப்ரீமியம் பைக்
    இந்தியாவில் புதிய 440சிசி பைக்கை வெளியிடத் திட்டமிட்டு வரும் ராயல் என்ஃபீல்டு ராயல் என்ஃபீல்டு
    ஹார்லி டேவிட்சன் மற்றும் ட்ரையம்ப்புக்குப் எதிராக என்ன திட்டம் வைத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு? ராயல் என்ஃபீல்டு
    சென்னை எழும்பூரில் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட ஜாவா தின நிகழ்வு ஜாவா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023