NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல் 
    சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல்

    சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல் 

    எழுதியவர் Nivetha P
    Apr 20, 2023
    11:20 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் வீலிங் செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    இவ்வாறு அதீத வேகத்தில் செல்வதால் வாகன விபத்துகளும் அதிகரித்து வருகிறது.

    பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களுக்கு மட்டுமின்றி எதிரில் வரும் அப்பாவி பொதுமக்களும் இதில் சிக்கி மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    சமீப காலங்களில் பைக் ரேஸில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்த நிலையில், இந்த சம்பவங்கள் சற்று குறைந்தது.

    தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் இதில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை எடுப்பதோடு, பைக்குகளையும் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    பைக்

    சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார் 

    இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடப்போவதாக தகவல் கிடைத்ததன் பேரில் போக்குவரத்து காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டார்கள்.

    அதன்படி நேற்று(ஏப்ரல்.,19) அதிகாலை 1.30 மணியளவில் சென்னை அண்ணாசாலை, டேம்ஸ் சாலை, வெலிங்டன் சாலை, ஸ்பென்சர் போன்ற முக்கிய பகுதிகளில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சினிமா பாணியில் அந்த இளைஞர்களை விரட்டி, மடக்கி பிடித்துள்ளார்கள்.

    அவர்களிடமிருந்து 16 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிடிபட்ட இளைஞர்கள் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்குதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    போக்குவரத்து காவல்துறை

    சமீபத்திய

    ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சம்பவம் பண்ணியது இப்படித்தான்; வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை அலறவிட்ட பலோச் போராளிகள் பலுசிஸ்தான்
    ஹேக்கிங் அபாயம்; டெஸ்க்டாப்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு அதி உயர் எச்சரிக்கை கூகுள்
    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி
    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா

    சென்னை

    சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி மீண்டும் துவக்கம் கொரோனா
    சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினலைப் பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்து வைக்கிறார் இந்தியா
    கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம்; பதிலளிக்க விஜய் ஆண்டனிக்கு உத்தரவு கோலிவுட்
    நிலத்தடி நீர்மட்டம் குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல் பருவகால மாற்றங்கள்

    போக்குவரத்து காவல்துறை

    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை புதுச்சேரி
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் சென்னை
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025