NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்படாத செந்தில் பாலாஜி - புதிய சர்ச்சை
    அடுத்த செய்திக் கட்டுரை
    விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்படாத செந்தில் பாலாஜி - புதிய சர்ச்சை
    விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்படாத செந்தில் பாலாஜி - புதிய சர்ச்சை

    விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்படாத செந்தில் பாலாஜி - புதிய சர்ச்சை

    எழுதியவர் Nivetha P
    Aug 17, 2023
    12:00 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    நெஞ்சுவலி காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அவருக்காக மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் அறையில் மின்விசிறி, கட்டில், மெத்தை உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், அவர் முதல் வகுப்பு கைதி என்பதால் சிறையின் உள்ளேயுள்ள 'லாக் அப்' அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    அங்கும் கட்டில், மெத்தை, மேஜை, நாற்காலி உள்ளிட்ட வசதிகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

    இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கடந்த 12ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.

    சிறை 

    மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் விளக்கம் 

    அதன்பின்னர் அவர் கடந்த 12ம்தேதி மீண்டும் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிறைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

    அப்போது அவரது உடல்நிலை சீராக தான் இருந்தது என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதேபோல் விசாரணை முடிந்து சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட பொழுதும் அவர் தானாக மாடிப்படிக்கட்டுகளில் இறங்கி வந்துள்ளார்.

    இதனால் அவருக்கு ஒதுக்கப்பட்ட லாக்-அப் அறையில் அடைக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.

    ஆனால் அவர் தற்போது வரை சிறையிலுள்ள மருத்துவமனையில் தான் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்னும் செய்தி பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள், "வரும் ஆகஸ்ட்.,25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் செந்தில் பாலாஜி மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செந்தில் பாலாஜி
    புழல் சிறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    செந்தில் பாலாஜி

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு
    ஆந்திரா, கேரளா மாநிலத்திலிருந்து இறக்கப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அமலாக்க இயக்குநரகம்
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    அமைச்சர் செந்தில் பாலாஜி: நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி சென்னை உயர் நீதிமன்றம்

    புழல் சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025