'டெல்லி மதுபான வழக்கில் ஆம் ஆத்மி கட்சி குற்றவாளியாக அறிவிக்கப்பட உள்ளது': அமலாக்கத்துறை
டெல்லி மதுக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அமலாக்க இயக்குநரகம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, இந்த வழக்கில் துணை குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை எதிர்த்து வாதிட்ட அமலாக்க இயக்குனரகம், மதுபான கொள்கை ஊழல் வழக்கின் விசாரணையை தாமதப்படுத்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் முயற்சித்து வருகின்றனர் என்று கூறியது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெரும் தலைவர்கள்
2021-22 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டெல்லி அரசாங்கத்தின் மதுபான கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் மற்றும் பணமோசடி செய்ததாகக் கூறப்படும் இந்த வழக்கில் இதுவரை ஆம் ஆத்மி கட்சியின் பெரும் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஊழலில் கிடைத்த பணத்தை ஆம் ஆத்மி 2022 ஆம் ஆண்டு கோவா சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக தெலுங்கானாவை சேர்ந்த பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கவிதாவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இடைக்கால ஜாமீனில் வெளிவந்தார்.