NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் டெல்லி அமைச்சர் அதிஷி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் டெல்லி அமைச்சர் அதிஷி 
    காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் அதிஷி

    காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் டெல்லி அமைச்சர் அதிஷி 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 21, 2024
    02:32 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி கடும் தண்ணீர்ப் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி வெள்ளிக்கிழமை தெற்கு டெல்லியின் போகலில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

    ஹரியானாவிலிருந்து நாளொன்றுக்கு 100 மில்லியன் கேலன் தண்ணீரைப் பெறுவதற்கு அழுத்தம் கொடுக்கவே இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.

    மேடையில் அதிஷியுடன், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், சஞ்சய் சிங் மற்றும் கட்சியின் பிற எம்எல்ஏக்களும் உள்ளனர்.

    உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, அதிஷி, சுனிதா கெஜ்ரிவால், சஞ்சய் சிங் மற்றும் பலர் ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இதுபற்றி அதிஷி, சமூக ஊடகப் பதிவில், அனைத்து முயற்சிகள் இருந்தும், ஹரியானாவின் பாஜக அரசாங்கம் டெல்லிக்கு உரிய பங்கை விடுவிக்கவில்லை என்று கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    உண்ணாவிரத போராட்டம்

    Amid #watercrisis in #Delhi, water minister #Atishi begins her indefinite hunger strike

    The protest is being held to put pressure on the #Haryana govt @nikhil_lakhwani shares latest updates | @pareektweets pic.twitter.com/TTygmopHCX

    — Mirror Now (@MirrorNow) June 21, 2024

    கோரிக்கை

    பிரதமருக்கு கோரிக்கை விடுத்த அமைச்சர் 

    தேசிய தலைநகரில் நிலவும் தண்ணீர் நெருக்கடியை தீர்க்க தலையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிஷி புதன்கிழமை கடிதம் எழுதினார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி, டெல்லியின் 28 லட்சம் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுவதாகவும், பிரதமர் மோடி "அரியானாவில் இருந்தோ அல்லது எங்கிருந்தோ டெல்லி மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும்" என்றும் கூறினார்.

    "நேற்று, ஹரியானா டெல்லிக்கு 613 MGDக்கு 513 MGD (ஒரு நாளைக்கு மில்லியன் கேலன்கள்) தண்ணீர் தந்தது. ஒரு MGD தண்ணீர் 28,500 பேருக்கு. அதாவது 28 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு தண்ணீர் இல்லை." என்று அவர் கூறினார்.

    இதற்கிடையில், இன்று ஜாமீனில் வெளிவரவிருந்த முதல்வர் கெஜ்ரிவால், கடைசி நிமிட உயர்நீதிமன்ற தீர்ப்பால், இன்னும் திஹார் சிறையிலேயே உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஆம் ஆத்மி
    ஹரியானா

    சமீபத்திய

    3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்
    தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்ததன் விளைவு; ஒரு இந்திய மாநிலத்தை விட குறைவான ஜிடிபி கொண்ட பாகிஸ்தான் பாகிஸ்தான்
    தனுஷின் 'குபேரா' ஓடிடி உரிமைகள் ₹50 கோடிக்கு விற்கப்பட்டதாம்! தனுஷ்
    மழைக்காலங்களில் கார்களை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி? நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை பருவமழை

    டெல்லி

     'டெல்லி மதுபான வழக்கில் ஆம் ஆத்மி கட்சி குற்றவாளியாக அறிவிக்கப்பட உள்ளது': அமலாக்கத்துறை  ஆம் ஆத்மி
    டெல்லி மதுபான கொள்கை வழக்கு: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 20 வரை நீட்டிப்பு  ஆம் ஆத்மி
    டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து: மூச்சுத் திணறி ஒருவர் பலி  வருமான வரித்துறை
     "கைதுக்கான காரணங்கள் வழங்கப்படவில்லை": நியூஸ்கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு காவல்துறை

    ஆம் ஆத்மி

    சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு சண்டிகர்
    சண்டிகர் மேயராக அறிவிக்கப்பட்டார் ஆம் ஆத்மி வேட்பாளர்: 'சட்டவிரோத' வாக்கெடுப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்  சண்டிகர்
    5 மாநிலங்களில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு டெல்லி
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8வது முறையாக சம்மன்  டெல்லி

    ஹரியானா

    வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழை; ஹரியானா துணை முதல்வர் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர் டெல்லி
    டெல்லி: மீண்டும் ஆபாயக் குறியை தாண்டியது யமுனையின் நீர்மட்டம்  டெல்லி
    ஹரியானாவில் இனக்கலவரம்: 3 பேர் பலி, இணையம் முடக்கம்  கலவரம்
    குருகிராமில் மீண்டும் கலவரம்: 14 கடைகள் சேதம், 7 கடைகளுக்கு தீ வைப்பு  குருகிராம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025