NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது
    இந்தியா

    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது

    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது
    எழுதியவர் Nivetha P
    Mar 09, 2023, 03:30 pm 1 நிமிட வாசிப்பு
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது
    கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு வந்த இண்டிகோ விமான கழிவறையில் புகைபிடித்த இளம்பெண் கைது

    அண்மை காலமாக விமானங்களில் தொடர்ந்து அத்துமீறலான செயல்கள் அரங்கேறி தொடர்ந்து பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது மீண்டும் அவ்வாறான சம்பவம் இண்டிகோ விமானத்தில் நடந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 5ம்தேதி கொல்கத்தாவில் இருந்து பெங்களூருக்கு 6E716 என்னும் எண் கொண்ட இண்டிகோ விமானம் வந்துள்ளது. இதில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 24 வயதுடைய பிரியங்கா என்னும் பெண் பயணி பயணித்துள்ளார். அவர் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது கழிவறைக்கு சென்று, தன்னிடம் இருந்த சிகரெட்டை எடுத்து பற்றவைத்து புகைத்து விட்டு, அதனை சரியாக அணைக்காமல் அப்படியே குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் சிகரெட் புகைவாசம் வந்ததை உணர்ந்த பணிப்பெண் கழிவறைக்கு சென்று பார்த்துள்ளார்.

    விமானத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட பெண் பயணி கைது

    அப்போது சரியாக அணைக்காமல் இருந்த சிகரெட்டை பார்த்த அவர், அதனை துரிதமாக செயல்பட்டு அணைத்துள்ளார். விமான விதிகளை மீறிய பிரியங்கா குறித்து அந்த பணிப்பெண் குழுவிடம் கூறியதையடுத்து, இத்தகவல் பெங்களூரு விமானநிலையத்திற்கு சென்றடைந்துள்ளது. இதனையடுத்து விமானம் பெங்களூரில் தரையிறங்கியதும் விமான நிலைய காவல்துறை பயணி பிரியங்காவை கைது செய்தனர். இதனையடுத்து விமானத்தில் பிற பயணிகள் உள்ளிட்டோரின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின்கீழ் போலீசார் அப்பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துள்ளார்கள். அதன் பின்னர் இந்த குற்றச்சாட்டுகளின் படி, 3 மாத சிறைக்காலம் அல்லது ரூ.250 அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து பிரியங்காவிற்கு ஜாமீன் அளிக்கப்பட்டு அவர் வெளியே வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    விமானம்
    பெங்களூர்
    கொல்கத்தா

    விமானம்

    62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை! வைரலான ட்வீட்
    விமானத்தில் பறக்க பயமா? இந்த டிப்ஸ்-களை கடைபிடிக்கலாம் மன ஆரோக்கியம்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    500 விமானங்களை களமிறக்கும் இண்டிகோ நிறுவனம்! முக்கிய நோக்கம் என்ன? விமான சேவைகள்

    பெங்களூர்

    பெங்களூரு காவல்துறையின் புதுவிதமான வீடியோ வைரல் இந்தியா
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை திருவண்ணாமலை
    ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இசையமைப்பாளர்கள்

    கொல்கத்தா

    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் தமிழ்நாடு
    வைரல் வீடியோ: ஜங்கிள் சஃபாரியின் போது கவிழ்ந்த ஜீப் இந்தியா
    கொல்கத்தாவில் சுற்றுலாவாசிகளை கவரும் டாப் 5 ஜமீன்தார் மாளிகைகள் சுற்றுலா
    உலகளவில் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் இந்தியர் உலக செய்திகள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023