NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள்
    டெல்லி விபத்தில் பலியான அஞ்சலி சிங்

    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள்

    எழுதியவர் Nivetha P
    Jan 06, 2023
    11:05 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் 20 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது காரில் சிக்கி சில கி.மீ., தூரம் இழுத்துச்செல்லப்பட்டு பலியான சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

    பலியான பெண் தனியாக பயணிக்கவில்லை என்று நேற்று தகவல்கள் வெளியானது.

    அதன்படி, விபத்து நடந்த அதிர்ச்சியிலும், பயத்திலும் யாருக்கும் தகவல் அளிக்காமல் வீட்டிற்கு சென்றுவிட்டதாக அஞ்சலியோடு பயணம் செய்ததாக கூறப்படும் நிதி என்பவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், விபத்தில் மரணமடைந்த அஞ்சலி வீட்டிற்கு டெல்லி முதல்வர் மற்றும் துணை முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறி, அனைத்து உதவிகளும் செய்து தருவதாக உறுதியளித்தனர்.

    இவர்களை தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டு 2012ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் தாயார் ஆஷாதேவியும் அஞ்சலி வீட்டிற்கு சென்று அவரது தாயாரை சந்தித்துள்ளார்.

    குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கவேண்டும் என அஞ்சலி தாயார் வேண்டுகோள்

    'நிதி கொடுத்துள்ள வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை'-நிர்பயா தாயார் ஆஷா தேவி

    மேலும் இது குறித்து நிர்பயா தாயார் கூறுகையில், "யார் மீதும் குற்றஞ்சாட்ட நான் விரும்பவில்லை. ஆனால், நிதி கூறிய வாக்குமூலத்தை ஏற்க முடியாது. அஞ்சலி குடும்பத்துக்கு அரசு வேலை அளிக்க வேண்டும்" என்று கூறினார்.

    அஞ்சலி தாயார் கூறுகையில், "நிதி யாரென்றே எனக்கு தெரியவில்லை. அஞ்சலிக்கு குடிப்பழக்கம் இல்லை, நிதி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஏதோ சதி திட்டம் போல் தெரிகிறது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

    இதுகுறித்து விசாரணை நடத்தும் சிறப்பு போலீஸ் ஆணையர் ஷாலினிசிங், சுல்தான்பூரி போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடர்பாக ஆய்வு செய்கையில் விபத்து நடந்த சமயத்தில் அந்த வழியாக 9 ரோந்து வாகனங்கள் சென்றுள்ளது, ஆனால் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவல்துறை
    இந்தியா

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா

    இந்தியா

    உலகத்தின் பார்வையில், சீன தொலைத்தொடர்பு நுட்பங்களுக்கு, இந்தியா தீர்வா? 5ஜி தொழில்நுட்பம்
    வரும் ஜனவரி 14ம் தேதி சபரிமலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் - நடை திறப்பு மாநிலங்கள்
    சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகள் நிறுத்தம்! உலகம்
    குறைந்த விலையில், ஜனவரி 2023 -இல், அறிமுகம் ஆகும் சாம்சங்-இன் புதிய போன் தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025