NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள்
    இந்தியா

    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள்

    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள்
    எழுதியவர் Nivetha P
    Jan 06, 2023, 11:05 am 1 நிமிட வாசிப்பு
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள்
    டெல்லி விபத்தில் பலியான அஞ்சலி சிங்

    டெல்லியில் 20 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது காரில் சிக்கி சில கி.மீ., தூரம் இழுத்துச்செல்லப்பட்டு பலியான சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. பலியான பெண் தனியாக பயணிக்கவில்லை என்று நேற்று தகவல்கள் வெளியானது. அதன்படி, விபத்து நடந்த அதிர்ச்சியிலும், பயத்திலும் யாருக்கும் தகவல் அளிக்காமல் வீட்டிற்கு சென்றுவிட்டதாக அஞ்சலியோடு பயணம் செய்ததாக கூறப்படும் நிதி என்பவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விபத்தில் மரணமடைந்த அஞ்சலி வீட்டிற்கு டெல்லி முதல்வர் மற்றும் துணை முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறி, அனைத்து உதவிகளும் செய்து தருவதாக உறுதியளித்தனர். இவர்களை தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டு 2012ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் தாயார் ஆஷாதேவியும் அஞ்சலி வீட்டிற்கு சென்று அவரது தாயாரை சந்தித்துள்ளார்.

    'நிதி கொடுத்துள்ள வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை'-நிர்பயா தாயார் ஆஷா தேவி

    மேலும் இது குறித்து நிர்பயா தாயார் கூறுகையில், "யார் மீதும் குற்றஞ்சாட்ட நான் விரும்பவில்லை. ஆனால், நிதி கூறிய வாக்குமூலத்தை ஏற்க முடியாது. அஞ்சலி குடும்பத்துக்கு அரசு வேலை அளிக்க வேண்டும்" என்று கூறினார். அஞ்சலி தாயார் கூறுகையில், "நிதி யாரென்றே எனக்கு தெரியவில்லை. அஞ்சலிக்கு குடிப்பழக்கம் இல்லை, நிதி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஏதோ சதி திட்டம் போல் தெரிகிறது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். இதுகுறித்து விசாரணை நடத்தும் சிறப்பு போலீஸ் ஆணையர் ஷாலினிசிங், சுல்தான்பூரி போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடர்பாக ஆய்வு செய்கையில் விபத்து நடந்த சமயத்தில் அந்த வழியாக 9 ரோந்து வாகனங்கள் சென்றுள்ளது, ஆனால் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    காவல்துறை

    சமீபத்திய

    கொரோனா பரவல் அதிகம் இருக்கும் தெற்காசிய நாடுகளில் இந்தியா முதலிடம்: WHO தகவல் உலகம்
    டெல்லி கேப்பிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11 ஐபிஎல் 2023
    கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை ஊட்டி
    பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : யாருக்கு வெற்றி வாய்ப்பு? ஐபிஎல் 2023

    இந்தியா

    எகிறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு - எவ்வளவு தெரியுமா? தொழில்நுட்பம்
    மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சித் தோல்வி இந்திய அணி
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு மாநில அரசு

    காவல்துறை

    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர் சென்னை
    அலுவலக நாற்காலியால் ஏற்பட்ட சண்டை: சக ஊழியரை துப்பாக்கியால் சுட்ட நபர் டெல்லி
    இஸ்லாமிய பெண்களின் பர்தாவை கழற்ற சொல்லி வம்பிழுத்த 7 பேர் கைது தமிழ்நாடு
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023