NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ப்ரீ-ஃபயர் கேம் விளையாடியதால் நேர்ந்த விபரீதம் : 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ப்ரீ-ஃபயர் கேம் விளையாடியதால் நேர்ந்த விபரீதம் : 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை
    ப்ரீ-ஃபயர் கேம் விளையாடியதால் நேர்ந்த விபரீதம் : 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை

    ப்ரீ-ஃபயர் கேம் விளையாடியதால் நேர்ந்த விபரீதம் : 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை

    எழுதியவர் Nivetha P
    Sep 01, 2023
    05:01 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு, வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியினை அடுத்த பெரிய பாலப்பக்கம் என்னும் கிராமத்தினை சேர்ந்தவர் வசந்தகுமார்.

    இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்று கூறப்படுகிறது. இவரது மனைவி கீதா, இவர்களுக்கு தாமு என்னும் 14 வயது மகன் ஒருவர் இருந்தார்.

    இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

    வசந்தகுமார் தற்போது உயிரோடு இல்லாத நிலையில், தாயும் மகனும் மட்டும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் தாமு எந்நேரமும் மொபைல் போனில் ப்ரீ-ஃபயர் விளையாட்டினை விளையாடி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    இதனால் கோபமுற்ற அவரது தயார் கீதா, தொடர்ந்து தனது மகன் தாமுவை கேம் விளையாட கூடாது என்று எச்சரித்துள்ளார் என்று தெரிகிறது.

    தற்கொலை 

    பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட மாணவன் 

    இதனிடையே நேற்று(ஆகஸ்ட்.,31)மொபைலில் கேம் விளையாடிக்கொண்டிருந்த தாமுவை அவரது தாயார் கண்டித்துள்ளார்.

    இதனால் கோபம் கொண்ட தாமு தங்கள் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார்.

    வெகுநேரமாகியும் அவர் கீழே வராததால் மாடிக்கு சென்று பார்த்த அந்த தாயாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

    தாமு பிளேட் கொண்டு தனது கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

    இதனை கண்டு கீதா கதறி அழுத நிலையில், தகவலறிந்து அங்குவந்த போலீசார் மாணவன் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இதற்கிடையே உயிரிழந்த மாணவன் யாரிடமும் பேசாமல், பழகாமல் தனிமையில் இருந்து வந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    நன்றாக படிக்கக்கூடிய மாணவனின் இந்த திடீர் தற்கொலை குறித்து தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தற்கொலை
    தமிழ்நாடு
    மொபைல்

    சமீபத்திய

    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்

    தற்கொலை

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் கோவை
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்  காவல்துறை

    தமிழ்நாடு

    முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது  மு.க ஸ்டாலின்
    அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    7 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    நீட் தேர்வு - அதிகமாக விண்ணப்பித்த மாநிலங்கள் வரிசையில் 3ம் இடத்தினை பிடித்த தமிழ்நாடு  இந்தியா

    மொபைல்

    வெளியானது 'சாம்சங் கேலக்ஸி M14 5G' ஸ்மார்ட் போன்!  சாம்சங்
    ஷாவ்மியின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்.. என்ன ஸ்பெஷல்?  ஸ்மார்ட்போன்
    ஏப்ரல் 18-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    வெளியானது 'ஷாவ்மி 13 அல்ட்ரா'.. என்னென்ன வசதிகள்?  ஸ்மார்ட்போன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025