Page Loader
காஷ்மீரில் அரசு ஊழியராக பணியாற்றிய தீவிரவாதி கைது
அரசு ஊழியராக பணியாற்றிய தீவிரவாதி கைது

காஷ்மீரில் அரசு ஊழியராக பணியாற்றிய தீவிரவாதி கைது

எழுதியவர் Venkatalakshmi V
Sep 01, 2023
09:39 am

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீரில், பிரிவினைவாதத்தை தூண்டும் தீவிரவாதிகள் பலரை போலீசார் கைது செய்து வருகின்றனர். பொதுமக்கள் இடையே மறைந்து வாழும் இவர்களை பிடிக்க, மாநில போலீசாரோடு, மாநில புலனாய்வு முகமை மற்றும் சி.ஐ.டி. அமைப்பினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று, தோடா மாவட்டத்தில். பல வருடங்களாக தேடப்பட்டு வந்த தீவிரவாதிகள் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தேடுதல் வேட்டையில் ஒரு சிலர் தப்பிவிட்டதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 8 பயங்கரவாதிகளும், அடில் பரூக் பரிடி, முகமது இக்பால் என்ற ஜாவித், முஜாகித் உசைன் என்ற நிசார் அகமது, தாரிக் உசைன், இஷ்தியாக் அகமது, அஜாஸ் அகமது, ஜமீல் அகமது மற்றும் இஷ்பாக் அகமது என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

card 2

அரசு வேலையில் தீவிரவாதி 

இவர்களில் அடில் பரூக் பரிடி என்பவன், ஜம்முவில் உள்ள மாநில கல்வி வாரியத்தில் பணியாற்றியவன் எனவும், இஷ்பாக் அகமது என்பவன், தோடா கோர்ட்டு வளாகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருபவன் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, தப்பியோடிய பயங்கரவாதிகளுள் சிலரும் அரசு பணிகள் மற்றும் தனியாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் சாமானியர்கள் போர்வையில், இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் பயங்கரவாத ஒழிப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.