NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காஷ்மீரில் அரசு ஊழியராக பணியாற்றிய தீவிரவாதி கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    காஷ்மீரில் அரசு ஊழியராக பணியாற்றிய தீவிரவாதி கைது
    அரசு ஊழியராக பணியாற்றிய தீவிரவாதி கைது

    காஷ்மீரில் அரசு ஊழியராக பணியாற்றிய தீவிரவாதி கைது

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 01, 2023
    09:39 am

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரில், பிரிவினைவாதத்தை தூண்டும் தீவிரவாதிகள் பலரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    பொதுமக்கள் இடையே மறைந்து வாழும் இவர்களை பிடிக்க, மாநில போலீசாரோடு, மாநில புலனாய்வு முகமை மற்றும் சி.ஐ.டி. அமைப்பினர் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், நேற்று, தோடா மாவட்டத்தில். பல வருடங்களாக தேடப்பட்டு வந்த தீவிரவாதிகள் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த தேடுதல் வேட்டையில் ஒரு சிலர் தப்பிவிட்டதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

    கைது செய்யப்பட்ட 8 பயங்கரவாதிகளும், அடில் பரூக் பரிடி, முகமது இக்பால் என்ற ஜாவித், முஜாகித் உசைன் என்ற நிசார் அகமது, தாரிக் உசைன், இஷ்தியாக் அகமது, அஜாஸ் அகமது, ஜமீல் அகமது மற்றும் இஷ்பாக் அகமது என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

    card 2

    அரசு வேலையில் தீவிரவாதி 

    இவர்களில் அடில் பரூக் பரிடி என்பவன், ஜம்முவில் உள்ள மாநில கல்வி வாரியத்தில் பணியாற்றியவன் எனவும், இஷ்பாக் அகமது என்பவன், தோடா கோர்ட்டு வளாகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருபவன் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    அதுமட்டுமின்றி, தப்பியோடிய பயங்கரவாதிகளுள் சிலரும் அரசு பணிகள் மற்றும் தனியாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் சாமானியர்கள் போர்வையில், இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட அனைவரும் பயங்கரவாத ஒழிப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    கைது

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ஜம்மு காஷ்மீர்

    பயனவாதிகளுக்கு நிதி வழங்கல்: ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் NIA ரெய்டு இந்தியா
    ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது பிரதமர் மோடி
    ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி வைரல் செய்தி
    கடும் பனி மற்றும் குளிரில் ரோந்து சென்ற BSF வீரர்: இணையவாசிகள் பாராட்டு இந்தியா

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  உச்ச நீதிமன்றம்
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025