NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு படை வீரர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு படை வீரர் பலி

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு படை வீரர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Jun 15, 2024
    12:52 pm

    செய்தி முன்னோட்டம்

    சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் 8 மாவோயிஸ்டுகள் இன்று கொல்லப்பட்டனர்.

    இந்த என்கவுன்டரில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் துரதிர்ஷ்டவசமாக மரணம் அடைந்தார் என்றும், மேலும் இருவர் காயமடைந்தனர் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

    பல்வேறு உள்ளூர் மற்றும் தேசிய பாதுகாப்பு பிரிவுகளின் கூட்டுப் படைகளை உள்ளடக்கிய நீண்ட துப்பாக்கிச் சண்டை நாராயண்பூர் மாவட்டத்தில் இன்று நடந்தது.

    இந்த நடவடிக்கையானது நாராயண்பூர்-கொண்டகான்-காங்கர்-தந்தேவாடா மாவட்ட ரிசர்வ் காவலர் படை(டிஆர்ஜி), சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎஃப்) மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின்(ஐடிபிபி) 53வது பட்டாலியனின் படைகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சியாகும்.

    இந்தியா 

    கூட்டு பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்

    மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதியில் கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடுவதற்காக இந்தப் படைகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்தன.

    நாராயண்பூர் மாவட்டத்தில் நீடித்த துப்பாக்கிச் சண்டையுடன், இரண்டு நாட்களாக தொடர்ந்து என்கவுன்டர் நடவடிக்கை நடந்து வந்தது,

    நாராயண்பூர், பிஜாப்பூர் மாவட்டம் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் பரவியுள்ள அபுஜ்மர் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட வனப்பகுதியாகும்.

    4000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட இது, அதன் மலைப்பாங்கான நிலப்பரப்பு காரணமாக பெரும்பாலும் மக்களால் அணுக முடியாததாக உள்ளது.

    இதனால் சமீப காலமாக மாவோயிஸ்ட் நடவடிக்கைகளுக்கு கோட்டையாக இந்த பகுதி மாறியுள்ளது.

    இது தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கம் மற்றும் அதன் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை கொரில்லா இராணுவம்(PLGA) ஆகியவற்றின் மையமாகவும் உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சத்தீஸ்கர்
    இந்தியா
    மாவோயிஸ்ட்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சத்தீஸ்கர்

    2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கு குவியும் பாராட்டு இந்தியா
    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட  பாஜக  பாஜக
    ஜூஸ் கடை முதல், 200 கோடி ரூபாய் சொத்து வரை: மஹாதேவ் சூதாட்ட செயலியின் பின்னணி என்ன? இந்தியா
    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா

    இந்தியா

    'மாலத்தீவுகள் வேண்டாம், இந்திய கடற்கரைகளுக்கு செல்லுங்கள்': தனது குடிமக்களிடம் அறிவுறுத்தியது இஸ்ரேல்  மாலத்தீவு
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் என்கவுன்டர்: லஷ்கர் பயங்கரவாத தலைவர் உட்பட இருவர் பலி  ஜம்மு காஷ்மீர்
    அதிக மாதாந்திர விற்பனையை எட்டியுள்ளது சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா சுஸூகி
    சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரின் முதல் வாக்கெடுப்பில் இந்தியா முன்னிலை ஜம்மு காஷ்மீர்

    மாவோயிஸ்ட்

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் ஜார்கண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025