NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வழக்கறிஞர்கள் இல்லாததால் 63 லட்ச வழக்குகள் தேக்கம்-'நேஷனல் ஜுடிஷியல் டேட்டா கிரிட்' தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வழக்கறிஞர்கள் இல்லாததால் 63 லட்ச வழக்குகள் தேக்கம்-'நேஷனல் ஜுடிஷியல் டேட்டா கிரிட்' தகவல்
    63 லட்ச வழக்குகள் தேக்கம் குறித்து 'நேஷனல் ஜுடிஷியல் டேட்டா கிரிட்' அறிக்கை

    வழக்கறிஞர்கள் இல்லாததால் 63 லட்ச வழக்குகள் தேக்கம்-'நேஷனல் ஜுடிஷியல் டேட்டா கிரிட்' தகவல்

    எழுதியவர் Nivetha P
    Jan 23, 2023
    09:02 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடு முழுவதும், கீழ் நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகள் விரைவில் எண்ணிக்கையில் 5 கோடியை எட்டிவிடும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

    அதனைதொடர்ந்து தற்போது 'நேஷனல் ஜுடிஷியல் டேட்டா கிரிட்' இதுகுறித்து ஒரு சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, வழக்கறிஞர்களின் மரணம், வழக்கு இழுபறியாகும் பட்சத்தில் வழக்கறிஞர்களுக்கு போதுமான கண்டனம் வழங்காமல் இருப்பது போன்ற காரணங்களால் வழக்குகள் தேக்கம் அதிகரித்து வருவதாக NJDP கூறுகிறது.

    மேலும், இலவச சட்டசேவைகள் திறமையின்மை போன்ற பல்வேறு காரணங்களாலும் வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளது என்றும் கூறியுள்ளது.

    மேற்குறிப்பிட்டபடி, தேக்கமடைந்துள்ள 63 லட்சம் வழக்குகளில் 77.7 சதவிகித வழக்குகள் டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுடையதாகும்.

    கொலீஜியம் அமைப்பு

    அரசின் சட்ட சேவைகள் குறித்து அறிவித்த மத்திய அரசு - 1.03 கோடி பேர் பயனடைவு

    இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை தாமதம் வழக்குகள் தேக்கமடைய முக்கிய காரணம் என்றும் NJDP அமைப்பு கூறியுள்ளது.

    எவ்வாறு வழக்கறிஞர்கள் பற்றாக்குறையால் வழக்குகள் தேக்கமடைந்துள்ளதோ அதே போல் நீதிபதிகள் பற்றாக்குறையும் இதற்கு காரணம் என்று சட்டவிழிப்புணர்வு அமைப்பான 'நியாயா' தலைவர் அனிஷாகோபி தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் ஒரு வழக்கு முடிக்க நான்கு ஆண்டுகள் ஆகும் நிலையில், அவ்வளவு காலம் வழக்கறிஞர்களுக்கு சாமானியர்களால் கட்டணத்தை செலுத்த முடியாமல் போகிறது.

    இந்நிலையில், அரசின் சட்டசேவைகள் குறித்து சிலதகவல்களை மத்திய அரசு வெளியிட்டதையடுத்து, கடந்த 5ஆண்டுகளில் 1.03கோடி பேர் பயனடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    நீதிமன்றங்களின் வழக்கு நிலுவைகுறித்து 'கொலீஜியம்' அமைப்பை மத்திய அரசு அண்மையில் விமர்சனம் செய்திருந்தநிலையில் தற்போது NJDG வெளியிட்டுள்ள அறிக்கைகள் அதிக கவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    7 அல்டிமேட் மாடல்களை அறிமுகப்படுத்தும் Harley Davidson! குஷியில் பைக் பிரியர்கள்; ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    நினைவு சின்னமாகிறதா ராமர் பாலம்: மத்திய அரசு பரிசீலனை இந்தியா
    5 ஆண்டுகள் கழித்து முதலிடம் பிடித்த சாம்சங் - Xiaomi வீழ்ச்சி தொழில்நுட்பம்
    வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025