NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி

    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி

    எழுதியவர் Nivetha P
    Feb 24, 2023
    06:59 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிலேயே வெங்காய சாகுபடி அதிகம் நடக்கும் மாநிலம் மஹாராஷ்டிரா தான்.

    இதனால் இந்த வெங்காயத்தின் விலை மிகுந்த வீழ்ச்சியை கண்டுள்ளது.

    அங்கு அறுவடை செய்யப்படும் வெங்காயங்கள் பெரும்பாலும் சோலாப்பூர் வேளாண்உற்பத்தி சந்தைக்கு கொண்டுவந்து தான் ஏலம் விடப்படும்.

    பல வணிகர்கள் விவசாயிகளின் விளைநிலத்திற்கே சென்று பொருட்களை கொண்டுவந்து இங்கு ஏலம் விடுவார்கள்.

    இந்நிலையில் சோலாப்பூர் பகுதியிலுள்ள போர்கான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திர துக்காராம் சவான்(58), இவர் அறுவடை செய்த வெங்காயமும் சுமார் 70கிமீ தூரத்திலிருந்து சந்தைக்கு கொண்டுவந்து ஏலம் விடப்பட்டது.

    ஏலத்தில் இவரது வெங்காயம் தரம் குறைந்தது என்றுகூறி கிலோ வெறும் 1 ரூபாய்க்கு ஏலம் போனது என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சவான் 512கிலோ வெங்காயத்திற்கு ரூ.512 பெற்றுச்செல்லலாம் என்று எண்ணியுள்ளார்.

    விவசாயி வேதனை

    வெறும் ரூ.2க்கு செக் கொடுத்து திகைக்க வைத்த வேளாண் உற்பத்தி சந்தை

    ஆனால் வெங்காயம் ஏற்றிவந்த வந்த வண்டிக்கூலி ரூ.509.51 என்று கூறி அதனை கழித்துவிட்டு வெறும் ரூ.2.49 காசுகள் இருப்பதாக பில்லை கொடுத்துள்ளார்கள்.

    அதனை கண்ட சவான் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

    அந்த பணத்தையும் செக் மூலம் கொடுத்துள்ளதோடு, அப்பணத்தை உடனே எடுக்க முடியாதவாறு 15 நாட்களுக்கு பிறகு வங்கி மூலம் பெற்றுக்கொள்ளும் வகையில் தேதி போட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

    இவையனைத்தையும் கண்டு சவான் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

    மேலும் இந்த வெங்காயத்தை உற்பத்தி செய்ய இதுவரை ரூ.40 ஆயிரம் செலவு செய்துள்ளதாக சவான் தனது வேதனையை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    இந்தியா

    சமீபத்திய

    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்
    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்
    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா

    இந்தியா

    சாதிய பாகுபாட்டை தடை செய்த அமெரிக்காவின் முதல் நகரம் உலகம்
    தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு தமிழ்நாடு
    சீன எல்லையில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கு தலைமை தாங்க இருக்கும் பெண் அதிகாரிகள் இந்திய ராணுவம்
    டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் ஆம் ஆத்மி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025