NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 50 ஆண்டுகளுக்கு முன்பு, 4ஆம் வகுப்பில் உண்டான சண்டை- க்ளாஸ்மேட்டின் பற்களை உடைத்த 2 முதியவர்கள்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    50 ஆண்டுகளுக்கு முன்பு, 4ஆம் வகுப்பில் உண்டான சண்டை- க்ளாஸ்மேட்டின் பற்களை உடைத்த 2 முதியவர்கள்
    பிரதிநிதித்துவ படம்

    50 ஆண்டுகளுக்கு முன்பு, 4ஆம் வகுப்பில் உண்டான சண்டை- க்ளாஸ்மேட்டின் பற்களை உடைத்த 2 முதியவர்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 09, 2025
    02:15 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன், பள்ளிப்பருவத்தில் ஏற்பட்ட ஒரு தகரருக்கு தற்போது பழி தீர்த்துள்ளனர் கேரளாவை சேர்ந்த 2 முதியவர்கள்.

    அவர்கள் 4 ஆம் வகுப்பு படிக்கும் போது நடந்த ஒரு தகராறை காரணம் காட்டி, தங்கள் பள்ளி வகுப்புத் தோழரைத் தாக்கியுள்ளனர்.

    குற்றம் சாட்டப்பட்ட மாலோத்து பாலகிருஷ்ணன் மற்றும் மேத்யூ வலியப்ளாக்கல் ஆகியோர் பாதிக்கப்பட்ட வி.ஜே. பாபுவை (62) கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

    கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மாலோம் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    விவரங்கள்

    தாக்குதலில் பாபுவின் பற்கள் உடைந்தது!

    இந்தத் தாக்குதலில் பாபுவின் இரண்டு பற்கள் உடைந்தன. மேலும் அவர் கண்ணூரில் உள்ள பரியாரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    சம்பவத்தின் போது பற்கள் உடைந்திருந்தால், அந்தச் செயல் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக மாறும் என்று ஊடக செய்திகள் கூறுகின்றன.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 126 (2), 118 (1), மற்றும் 3 (5) ஆகியவற்றின் கீழ், தவறான கட்டுப்பாடு, தானாக முன்வந்து காயப்படுத்துதல் மற்றும் பொதுவான நோக்கம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சம்பவம்

    எதற்காக தாக்குதல்? எப்படி நடந்தது?

    குற்றம் சாட்டப்பட்ட பாலகிருஷ்ணன் மற்றும் வலியப்ளாக்கல் ஆகியோர் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலல் கிராம பஞ்சாயத்தில் உள்ள மாலோமின் நடக்கல்லு உதவி பெறும் பள்ளியில் பாதிக்கப்பட்ட பாபுவின் வகுப்பு தோழர்கள்.

    சம்பவத்திற்குப் பிறகு போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பாலகிருஷ்ணன், 4ஆம் வகுப்பில் ஒருமுறை ஏற்கனவே தன்னை அடித்ததாக பாபு கூறினார்.

    எனினும், மூவரும் பல ஆண்டுகளாக அருகருகே உள்ள நிலங்களில் விவசாயம் செய்து, நட்பு பாராட்டி வந்துள்ளனர்.

    இருப்பினும், திங்கட்கிழமை மூவரும் சந்தித்தபோது, ​​பழைய தகராறு மீண்டும் தலைதூக்கியது.

    இது சண்டைக்கு வழிவகுத்தது.

    இதைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணன் பாபுவை கீழே தள்ள, மேத்யூ அவரது முகத்திலும் அவரது உடலிலும் கல்லால் அடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா

    சமீபத்திய

    50 ஆண்டுகளுக்கு முன்பு, 4ஆம் வகுப்பில் உண்டான சண்டை- க்ளாஸ்மேட்டின் பற்களை உடைத்த 2 முதியவர்கள் கேரளா
    எலான் மஸ்க் நிறுவனத்திற்கு பின்னடைவு; சூரிய காந்த புயலால் ஸ்டார்லிங்கின் 500க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் செயலிழப்பு ஸ்பேஸ்எக்ஸ்
    வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா உடனான உள்நாட்டு தொடர்களுக்கான போட்டி மைதானங்களை மாற்றியது பிசிசிஐ பிசிசிஐ
    தெற்கு தமிழக மாநிலங்களில் நாளை முதல் கனமழை எச்சரிக்கை கனமழை

    கேரளா

    இந்தியாவின் முதல் ஆபத்தான கிளேட் 1 வகை குரங்கம்மை தொற்று கேரள நபருக்கு இருப்பது கண்டுபிடிப்பு குரங்கம்மை
    Mpox கிளேட் 1 பி வழக்கு: மத்திய அரசு வெளியிட்ட நடைமுறைகள் குரங்கம்மை
    கேரள முதியவருக்கு முரைன் டைபஸ் என்ற அறிய நோய் கண்டுபிடிப்பு: அறிகுறிகள், சிகிச்சை, தடுப்பு என்ன? வியட்நாம்
    திடீரென குறுக்கே வந்த ஸ்கூட்டர்; கேரளா முதல்வர் பினராயி விஜயனின் கார் விபத்தில் சிக்கியது விபத்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025