
50 ஆண்டுகளுக்கு முன்பு, 4ஆம் வகுப்பில் உண்டான சண்டை- க்ளாஸ்மேட்டின் பற்களை உடைத்த 2 முதியவர்கள்
செய்தி முன்னோட்டம்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், பள்ளிப்பருவத்தில் ஏற்பட்ட ஒரு தகரருக்கு தற்போது பழி தீர்த்துள்ளனர் கேரளாவை சேர்ந்த 2 முதியவர்கள்.
அவர்கள் 4 ஆம் வகுப்பு படிக்கும் போது நடந்த ஒரு தகராறை காரணம் காட்டி, தங்கள் பள்ளி வகுப்புத் தோழரைத் தாக்கியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட மாலோத்து பாலகிருஷ்ணன் மற்றும் மேத்யூ வலியப்ளாக்கல் ஆகியோர் பாதிக்கப்பட்ட வி.ஜே. பாபுவை (62) கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மாலோம் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
விவரங்கள்
தாக்குதலில் பாபுவின் பற்கள் உடைந்தது!
இந்தத் தாக்குதலில் பாபுவின் இரண்டு பற்கள் உடைந்தன. மேலும் அவர் கண்ணூரில் உள்ள பரியாரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவத்தின் போது பற்கள் உடைந்திருந்தால், அந்தச் செயல் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக மாறும் என்று ஊடக செய்திகள் கூறுகின்றன.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 126 (2), 118 (1), மற்றும் 3 (5) ஆகியவற்றின் கீழ், தவறான கட்டுப்பாடு, தானாக முன்வந்து காயப்படுத்துதல் மற்றும் பொதுவான நோக்கம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம்
எதற்காக தாக்குதல்? எப்படி நடந்தது?
குற்றம் சாட்டப்பட்ட பாலகிருஷ்ணன் மற்றும் வலியப்ளாக்கல் ஆகியோர் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலல் கிராம பஞ்சாயத்தில் உள்ள மாலோமின் நடக்கல்லு உதவி பெறும் பள்ளியில் பாதிக்கப்பட்ட பாபுவின் வகுப்பு தோழர்கள்.
சம்பவத்திற்குப் பிறகு போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பாலகிருஷ்ணன், 4ஆம் வகுப்பில் ஒருமுறை ஏற்கனவே தன்னை அடித்ததாக பாபு கூறினார்.
எனினும், மூவரும் பல ஆண்டுகளாக அருகருகே உள்ள நிலங்களில் விவசாயம் செய்து, நட்பு பாராட்டி வந்துள்ளனர்.
இருப்பினும், திங்கட்கிழமை மூவரும் சந்தித்தபோது, பழைய தகராறு மீண்டும் தலைதூக்கியது.
இது சண்டைக்கு வழிவகுத்தது.
இதைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணன் பாபுவை கீழே தள்ள, மேத்யூ அவரது முகத்திலும் அவரது உடலிலும் கல்லால் அடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.