NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள், 2 ராணுவ வீரர்கள் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள், 2 ராணுவ வீரர்கள் பலி

    ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள், 2 ராணுவ வீரர்கள் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Jul 07, 2024
    11:32 am

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஐந்து பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முதல் என்கவுன்டர் மோடர்காம் கிராமத்தில் நடந்தது. அங்கு பாரா கமாண்டோவான லான்ஸ் நாயக் பிரதீப் நைன் கொல்லப்பட்டார்.

    உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கிய பாதுகாப்புப் படையினர், குறைந்தது இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகளை அவர்களின் மறைவிடத்தில் வளைத்தனர்.

    "குல்காம் மாவட்டத்தின் மோடர்காம் கிராமத்தில் என்கவுண்டர் தொடங்கியது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பணியில் உள்ளனர். மேலும் விவரங்கள் இனி தான் தெரியவரும்" என்று இந்த துப்பாக்கிச் சண்டை குறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை ட்வீட் செய்திருந்தது.

    ஜம்மு காஷ்மீர் 

    பதுங்கியிருந்த பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய  பயங்கரவாதிகள் 

    ஃபிரிசல் சின்னிகம் கிராமத்தில் லஷ்கர் பயங்கரவாதிகள் இருக்கலாம் என பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு இரண்டாவது துப்பாக்கிச் சண்டை நடந்தது.

    இந்த நடவடிக்கையின் போது 1வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸின் ஹவால்தார் ராஜ் குமார் உயிரிழந்தார். தீவிரவாதி ஒருவர் அப்பகுதியில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

    அதிகாரிகள் ஃபிரிசல் சின்னிகம் கிராமத்தை அடைந்ததும், அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால், துப்பாக்கிச் சண்டை மூண்டது.

    இரு பகுதிகளிலும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்தது.

    இதற்கிடையில், காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல், வி.கே.பிர்தி, என்கவுண்டர் நடந்த இடங்களை பார்வையிட்டு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடரும் என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்
    பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூர்
    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி

    ஜம்மு காஷ்மீர்

    உச்ச நீதிமன்றம் ரத்து செய்த ஜம்மு-காஷ்மீரின் சட்டப்பிரிவு 370-இல் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் என்னென்ன? உச்ச நீதிமன்றம்
    புதுச்சேரி மற்றும் ஜம்மு&காஷ்மீரில் 33% மகளிர் இடஒதுக்கீடு - மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா நாடாளுமன்றம்
    ஜம்மு&காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 3 வீரர்கள் பலி துப்பாக்கி சூடு
    பூஞ்ச் ​​தாக்குதல்: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 கார்பைன் துப்பாக்கியை பயன்படுத்திய பயங்கரவாதிகள் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025