NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் பலி 

    ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    May 07, 2024
    05:15 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    லஷ்கர் இ தொய்பாவின் ஆதரவு பெட்ரா பயங்கரவாத அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டின்(டிஆர்எஃப்) தீவிர செயல்பாட்டாளராக இருந்த பாசித் தார் என்பவரும் இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.

    குல்காமின் ரெட்வானி பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, பாதுகாப்புப் படையினர் நேற்று பிற்பகுதியில் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    ஆனால், அந்த தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறி, இன்று வரை நீடித்தது.

    தீவிரவாதிகளின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்பட்டு மீட்கப்படவில்லை.

    இந்தியா 

    பயங்கரவாதிகளின் இரண்டு குழுக்களைக் கண்டுபிடிக்க நடந்த நடவடிக்கைகள் 

    ஏப்ரல் 28 அன்று பயங்கரவாதிகளுடன் நடந்த ஒரு என்கவுண்டரில் ஒரு கிராம பாதுகாப்பு காவலர் (VDG) கொல்லப்பட்டதை அடுத்து, பயங்கரவாதிகளின் இரண்டு குழுக்களைக் கண்டுபிடிப்பதற்காக பாதுகாப்பு முகமைகள் கதுவா மாவட்டத்தில் தேடுதல் நடவடிக்கையின் எல்லையை விரிவுபடுத்தியது.

    சோச்ரு காலா உயரத்தில் உள்ள பனாரா கிராமத்தில் இந்த என்கவுண்டர் நடந்தது.

    எல்லைக்கு அப்பால் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகளின் இரண்டு குழுக்கள் அப்பகுதியில் இருப்பதாக நம்பப்படுகிறது என்று ஏப்ரல் 29 அன்று, கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் (ஜம்மு மண்டலம்) ஆனந்த் ஜெயின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    இந்தியா

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    ஜம்மு காஷ்மீர்

    முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான் பயங்கரவாதம்
    பயங்கரவாதம்: ஐநா சபையில் பாகிஸ்தானை சல்லி சல்லியாக நொறுக்கிய காஷ்மீர் ஆர்வலர்  ஐநா சபை
    ஜம்மு காஷ்மீரின் அடுத்த துணைநிலை ஆளுநர் ஆகிறாரா குலாம் நபி ஆசாத்?  இந்தியா
    ஐந்தாண்டுகளுக்கு பின் தமிழகம் வந்த சோனியா காந்தி- முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு முதல் அமைச்சர்

    இந்தியா

    இந்தியாவின் பிரமிக்க வைக்கும் பட்டாம்பூச்சி பூங்காக்கள் வாழ்க்கை
    CAA விதிகள் இந்திய அரசியலமைப்பை மீறும்: அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை  குடியுரிமை (திருத்த) சட்டம்
    இந்தியாவில் முதன்முறையாக இலகுவான புல்லட்-ப்ரூஃப் ஜாக்கெட்டை உருவாகியுள்ளது DRDO  பாதுகாப்பு துறை
    சொத்துப் பங்கீடு தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்து: காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025