Page Loader
ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் பலி 

ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் பலி 

எழுதியவர் Sindhuja SM
May 07, 2024
05:15 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். லஷ்கர் இ தொய்பாவின் ஆதரவு பெட்ரா பயங்கரவாத அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டின்(டிஆர்எஃப்) தீவிர செயல்பாட்டாளராக இருந்த பாசித் தார் என்பவரும் இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டார். குல்காமின் ரெட்வானி பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, பாதுகாப்புப் படையினர் நேற்று பிற்பகுதியில் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், அந்த தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறி, இன்று வரை நீடித்தது. தீவிரவாதிகளின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்பட்டு மீட்கப்படவில்லை.

இந்தியா 

பயங்கரவாதிகளின் இரண்டு குழுக்களைக் கண்டுபிடிக்க நடந்த நடவடிக்கைகள் 

ஏப்ரல் 28 அன்று பயங்கரவாதிகளுடன் நடந்த ஒரு என்கவுண்டரில் ஒரு கிராம பாதுகாப்பு காவலர் (VDG) கொல்லப்பட்டதை அடுத்து, பயங்கரவாதிகளின் இரண்டு குழுக்களைக் கண்டுபிடிப்பதற்காக பாதுகாப்பு முகமைகள் கதுவா மாவட்டத்தில் தேடுதல் நடவடிக்கையின் எல்லையை விரிவுபடுத்தியது. சோச்ரு காலா உயரத்தில் உள்ள பனாரா கிராமத்தில் இந்த என்கவுண்டர் நடந்தது. எல்லைக்கு அப்பால் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகளின் இரண்டு குழுக்கள் அப்பகுதியில் இருப்பதாக நம்பப்படுகிறது என்று ஏப்ரல் 29 அன்று, கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் (ஜம்மு மண்டலம்) ஆனந்த் ஜெயின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது