NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செந்தில் பாலாஜி தம்பிக்கு 3வது முறையாக சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    செந்தில் பாலாஜி தம்பிக்கு 3வது முறையாக சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை 
    செந்தில் பாலாஜி தம்பிக்கு 3வது முறையாக சம்மன் அனுப்பிய வருமானவரித்துறை

    செந்தில் பாலாஜி தம்பிக்கு 3வது முறையாக சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை 

    எழுதியவர் Nivetha P
    Jul 02, 2023
    03:25 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்த நிலையில், நீதிமன்ற காவலில் உள்ள அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதன் காரணமாக, தற்போது அவர் இலாகா இல்லா அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கு முன்னதாக கடந்த மே மாதம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சென்னை, கோவை, கரூர் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    அசோக் 

    விசாரணைக்கு வரவில்லை என்றால் சட்டபூர்வ நடவடிக்கை 

    அப்போது கரூரில் அசோக் வீட்டில் சோதனைச்செய்ய சென்ற அதிகாரிகளை தடுத்துநிறுத்திய அவரது திமுக ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்ததோடு தாக்குதலிலும் ஈடுபட்டனர்.

    இதனால் வருமானவரித்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்புப்படையின் பாதுகாப்போடு சென்று அவரது வீட்டில் சோதனையிட்டனர்.

    சிலநாட்களாக தொடர்ந்த இச்சோதனையில். கட்டுக்கட்டாக பணமும், முக்கியமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

    இதனையடுத்து வருமானவரித்துறை அசோக்கை விசாரிக்க முடிவுச்செய்து 2 முறை சம்மன் அனுப்பியுள்ளனர்.

    ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்தும் எவ்வித தகவலுமில்லை.

    இந்நிலையில், 3வதுமுறையாக அசோக்கிற்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    அதில் வரும் 27ம்தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இம்முறையும் அவர் ஆஜராகாவிடில் அவர்மீது வழக்குப்பதிவு செய்து சட்டபூர்வநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திமுக

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணை ஒத்திவைப்பு  மின்சார வாரியம்
    தமிழக செயலாளர் இறையன்பு வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்  மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு மாநிலத்தின் அடுத்த டிஜிபி யார் என டெல்லியில் ஆலோசனை கூட்டம்  தமிழக அரசு
    தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழகம்

    திமுக

    சட்ட நடவடிக்கைக்கு தயார் - திமுகவிற்கு சவால் விட்ட அண்ணாமலை  பாஜக அண்ணாமலை
    அண்ணா பல்கலைக்கழக பதவியினை ராஜினாமா செய்தார் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்
    முதல்வர் ஸ்டாலினின் குடும்பம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்தது: பாஜக  தமிழ்நாடு
    உதயநிதி, சபரீசனிடம் இருந்து என்னைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள்: ஆடியோ சர்ச்சை பற்றி பேசிய PTR  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025