Page Loader
இந்தியாவில் மேலும் 335 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 5 பேர் பலி 
இதுவரை, இந்தியாவில் 4.50(4,50,04,816) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் மேலும் 335 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 5 பேர் பலி 

எழுதியவர் Sindhuja SM
Dec 17, 2023
05:15 pm

செய்தி முன்னோட்டம்

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 335ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 1,701ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.50(4,50,04,816) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,33,316ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 5 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 2 தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

கலெக்ஸாண்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளன

இந்தியாவில் டிசம்பர்16ஆம் தேதி 339 பாதிப்புகளும் டிசம்பர் 15ஆம் தேதி 312 பாதிப்புகளும் டிசம்பர் 14ஆம் தேதி 237 பாதிப்புகளும் டிசம்பர் 10ஆம் தேதி 166 பாதிப்புகளும் டிசம்பர் 9ஆம் தேதி 148 பாதிப்புகளும் டிசம்பர் 8ஆம் தேதி 180 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,69,799ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் இதுவரை பேர் 6,985,964 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை, உலகளவில் 772,138,818 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,981,263 ஆக உயர்ந்துள்ளது.