NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நவி மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கியிருக்கலாம் என தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நவி மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கியிருக்கலாம் என தகவல் 

    நவி மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கியிருக்கலாம் என தகவல் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 27, 2024
    09:30 am

    செய்தி முன்னோட்டம்

    நவி மும்பையில் இன்று மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக்கொண்டனர்.

    மகாராஷ்டிராவில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் ஷாபாஸ் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF) ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அந்த கட்டிடத்தில் 24 குடும்பங்கள் வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    செய்தியாளர்களிடம் பேசிய நவி மும்பை மாநகராட்சி ஆணையர் கைலாஸ் ஷிண்டே, இன்று அதிகாலை 5 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்ததாக தெரிவித்தார்.

    2 பேர் மீட்கப்பட்டதாகவும், மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிராவுக்கு கனமழை எச்சரிக்கை 

    "அதிகாலை 5 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது. இது ஒரு G+3 கட்டிடமாகும். இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் சிக்கியிருக்கலாம். NDRF குழு இங்கே உள்ளது. மீட்பு பணி நடந்து வருகிறது" என்று ஷிண்டே ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

    இதுகுறித்து பேசிய நவி மும்பை துணை தீயணைப்பு அதிகாரி புருஷோத்தம் ஜாதவ், "அதிகாலை 4.50 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து எங்களுக்கு அழைப்பு வந்தது. 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 2 பேர் சிக்கியிருக்கலாம் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது" என்றார்.

    இதற்கிடையில், வானிலை ஆய்வு மையம்,மகாராஷ்டிராவின் ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், புனே மற்றும் சதாரா மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா

    சமீபத்திய

    அரபிக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: IMD காற்றழுத்த தாழ்வு நிலை
    சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'க்கு இன்னும் 40 நாள் ஷூட்டிங் தான் பாக்கி என இயக்குனர் சுதா கொங்கரா தகவல் சிவகார்த்திகேயன்
    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி
    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்

    மகாராஷ்டிரா

    பிற துறைகளில் சாதித்த தமிழ் சினிமா பிரபலங்களின் வாரிசுகள் சினிமா
    நாக்பூர் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து: 9 பேர் பலி, மூவர் காயம் காவல்துறை
    PIFF சர்வதேச திரைப்பட விழாவிற்கு 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வு  தமிழ் திரைப்படம்
    மும்பையில் செயல்படும் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்  மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025