NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வைகை அணை நீர்மட்டம் உயர்வால் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    வைகை அணை நீர்மட்டம் உயர்வால் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
    வைகை அணை நீர்மட்டம் உயர்வால் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

    வைகை அணை நீர்மட்டம் உயர்வால் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

    எழுதியவர் Nivetha P
    Nov 07, 2023
    02:31 pm

    செய்தி முன்னோட்டம்

    தேனி மாவட்டம் வைகை அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ள நிலையில், அப்பகுதியில் வசிக்கும் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தேனியில் கடந்த ஒருவார காலமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது, 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    ஏற்கனவே அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று(நவ.,7) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 68.08 அடியை எட்டியுள்ளதால் 69 அடிக்கு நீர் மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக தற்போது மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளம் 

    அணையின் நீர்வரத்து வினாடிக்கு 2,310 கன அடியாக உள்ளது

    வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக துணை ஆறுகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    அணையின் நீர்வரத்து வினாடிக்கு 2,310 கன அடியாக உள்ளது.

    மதுரை மாநகர் மக்களுக்கான குடிநீர் தேவைக்காக மட்டும் தற்போது அணையில் இருந்து 69 கன அடி நீர் திறக்கப்படும் நிலையில், அணையின் நீர் இருப்பு 5,338 மி.கன அடியாக உள்ளதென்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில், இதன் நீர்மட்டம் இன்று மாலை அல்லது நாளை(நவ.,8) காலை 69 அடியினை எட்டும் என்பதால் அதிகாரிகள் அப்பகுதியினை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    அணையின் நீர்மட்டம் 70 அடியினை எட்டும் பட்சத்தில், அணையின் மதகுகள் வழியே நீர் திறக்கப்படும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேனி
    பருவமழை
    எச்சரிக்கை
    மதுரை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தேனி

    தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை மாவட்ட செய்திகள்
    கேரளாவில் 100க்கு 97மதிப்பெண்கள் எடுத்த 108 வயதுடைய மூதாட்டி தமிழ்நாடு
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    திரைப்படமாக தயாராகும் 'அரிசி கொம்பன்' ஆண் யானையின் கதை - பர்ஸ்ட் லுக் போஸ்டர்  திரைப்பட துவக்கம்

    பருவமழை

    பருவமழை காலத்தில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்  சுற்றுலா
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  ஹிமாச்சல பிரதேசம்
    அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை  சென்னை
    திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மழை

    எச்சரிக்கை

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு சமூக வலைத்தளம்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    காலிமனை பதிவிற்கு நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் - பதிவுத்துறை உத்தரவு  தமிழ்நாடு
    அரசு விரைவு பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கான நிபந்தனைகள் தமிழ்நாடு

    மதுரை

    அமெரிக்க மகனுக்கு மதுரையில் கலாச்சார நிகழ்ச்சி நடத்திய பெற்றோர் - நெகிழ்ச்சி சம்பவம்  அமெரிக்கா
    ஆசியாவின் சிறந்த தடகள வீரராக மதுரை செல்வத்திருமாறன் தேர்வு  தடகள போட்டி
    பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி மெரினா கடற்கரை
    மதுரையில் கலைஞர் நூலகம் - 15ம் தேதி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025