NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர் வன்முறையை விசாரிக்க 29 பெண்கள் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் குழு அமைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க 29 பெண்கள் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் குழு அமைப்பு
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க 29 பெண்கள் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் குழு அமைப்பு

    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க 29 பெண்கள் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் குழு அமைப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 17, 2023
    12:24 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைகளை, குறிப்பாக பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க, மத்திய அரசு, CBI விசாரணைக்கு உத்தரவிட்டது.

    இதன் தொடர்ச்சியாக, தற்போது 53 அதிகாரிகள் அடங்கிய மிகப்பெரிய குழு ஒன்றை ஒருங்கிணைத்து விசாரணையை துவக்கியுள்ளது மத்திய புலனாய்வு துறை.

    இத்தனை பெரிய குழு, விசாரணைக்கு பணிக்கப்பட்டது இதுவே முதல் முறை எனக்கூறப்படுகிறது.

    கூடுதல் சுவாரசியமாக, இந்த குழுவில் 29 பெண் விசாரணை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

    லவ்லி கட்டியார், நிர்மலா தேவி மற்றும் மோஹித் குப்தா ஆகிய மூன்று டிஐஜிக்கள் அடங்கிய குழுவும் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜ்வீர் ஆகியோரும் இணைந்து விசாரணை மேற்கொள்வார்கள் எனவும், ஒட்டுமொத்த விசாரணையை இணை இயக்குநர் கன்ஷ்யாம் உபாத்யாய் மேற்பார்வையிடுவார் எனவும் கூறப்படுகிறது.

    card 2

    உள்ளூர் காவல்துறையை ஒதுக்கும் சிபிஐ 

    பொதுவாக இவ்வளவு பெரிய வழக்குகள், சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் போது, ​​அந்த வழக்கு சம்பந்தப்பட்ட மாநிலத்தை சார்ந்த காவல்துறையும் விசாரணையில் துணை நிற்கும்.

    ஆனால் மணிப்பூரைப் பொறுத்தவரை, விசாரணையில் பாரபட்சமான குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் பங்கைக் குறைக்க CBI அதிகாரிகள் முயற்சிப்பார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.

    ஏற்கனவே, மத்திய புலனாய்வு துறை, எட்டு வழக்குகளை இதுவரை பதிவு செய்துள்ளது.

    அதில், மே 4 அன்று நடைபெற்றதாக கூறப்பட்ட, நாட்டையே உலுக்கிய பழங்குடியின பெண்களின் பாலியல் வன்கொடுமையும் அடங்கும்.

    மணிப்பூர் வன்முறை தொடர்பாக மேலும் ஒன்பது வழக்குகளை சிபிஐ விசாரிக்க உள்ளது. இதன் மூலம், இது வரை 17 வழக்குகளை சிபிஐ கையாண்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    சிபிஐ

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    மணிப்பூர்

    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  இந்தியா
    மணிப்பூர்: உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி  கலவரம்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி
    கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஜீரோ FIRகள்: அலறும் மணிப்பூர் போலீஸ்  காவல்துறை

    சிபிஐ

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது இந்தியா
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  உலகம்
    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025