ஹோலி பண்டிகை: ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட டெல்லி இளைஞர்கள்
இந்தியாவில் ஹோலி கொண்டாட்டத்தின் போது 22 வயதான ஜப்பானிய பெண்மணி ஒரு குழுவினரால் துன்புறுத்தப்பட்டதாக மணிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது. பரவலாக பேசப்படும் அந்த வீடியோவில் "ஹோலி ஹே" என்று கூறும் இளைஞர்கள் ஜப்பானிய பெண்ணை பிடித்து அவர் மீது வண்ண பொடிகளை தூவுவது தெரிகிறது. அந்த பெண்ணின் மீது யாரோ ஒருவர் முட்டையை உடைப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அந்த ஆண்களின் பிடியில் இருந்து அவர் தப்பிக்க முயல்வதும் ஒரு ஆணை அவர் கன்னத்தில் அரைவதும் அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இது குறித்த எந்த புகாரும் வரவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஜப்பானிய தூதரகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.