NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மோர்பி பால விபத்து நடக்கும் முன்பே 22 ஒயர்கள் உடைந்து தான் இருந்தன: விசாரணை அறிக்கை
    இந்தியா

    மோர்பி பால விபத்து நடக்கும் முன்பே 22 ஒயர்கள் உடைந்து தான் இருந்தன: விசாரணை அறிக்கை

    மோர்பி பால விபத்து நடக்கும் முன்பே 22 ஒயர்கள் உடைந்து தான் இருந்தன: விசாரணை அறிக்கை
    எழுதியவர் Sindhuja SM
    Feb 20, 2023, 11:07 am 1 நிமிட வாசிப்பு
    மோர்பி பால விபத்து நடக்கும் முன்பே 22 ஒயர்கள் உடைந்து தான் இருந்தன: விசாரணை அறிக்கை
    இந்த அறிக்கையை சமீபத்தில் மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, மோர்பி நகராட்சியுடன் பகிர்ந்து கொண்டது.

    குஜராத் அரசு நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு(SIT) தனது முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளது. பாலத்தின் கேபிளில் ஏறக்குறைய பாதி ஒயர்களில் அரிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் பழைய சஸ்பெண்டர்கள் புதியவற்றால் வெல்டிங் செய்யப்படிருக்கிறது என்றும் அந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுவே பாலம் சரிந்து விழ வழிவகுத்த சில முக்கிய காரணங்களாகும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் டிசம்பர் 2022இல் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட SIT சமர்ப்பித்த 'மோர்பி பால சம்பவம் குறித்த பூர்வாங்க அறிக்கையின்' ஒரு பகுதியாகும். இந்த அறிக்கையை சமீபத்தில் மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, மோர்பி நகராட்சியுடன் பகிர்ந்து கொண்டது.

    விபத்து நடக்கும் முன்பே உடைந்திருந்த கம்பிகள்

    கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி இடிந்து விழுந்த மோர்பி தொங்கு பாலத்தின் பராமரிப்புப் பொறுப்பை அஜந்தா மேனுஃபேக்ச்சரிங் லிமிடெட் (ஓரேவா குரூப்) ஏற்றுக்கொண்டிருந்தது. பாலத்தின் பழுது, பராமரிப்பு மற்றும் இயக்கத்தில் பல குறைபாடுகளை SIT கண்டறிந்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் பெனிவால், ஐபிஎஸ் அதிகாரி சுபாஷ் திரிவேதி, மாநில சாலைகள் மற்றும் கட்டிடத் துறையின் செயலாளர், தலைமைப் பொறியாளர் மற்றும் கட்டமைப்பு பொறியியல் பேராசிரியர் ஆகியோர் SITயில் உறுப்பினர்களாக இருந்தனர். 1887ஆம் ஆண்டு மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு முக்கிய கேபிள்களில், ஒரு கேபிள் அரிப்பில் பழுதடைந்திருந்ததாகவும், அக்டோபரில் கேபிள் துண்டிக்கப்படுவதற்கு முன்பே அதன் கம்பிகளில் கிட்டத்தட்ட பாதி "ஏற்கனவே உடைந்திருக்கலாம்" என்றும் SIT குறிப்பிட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    குஜராத்

    இந்தியா

    ட்விட்டரை போல் இனி பேஸ்புக் இன்ஸ்டாவிற்கும் கட்டணம்! பயனர்கள் அதிர்ச்சி! மெட்டா
    பிப்ரவரி 19க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; ஃபிரீ ஃபையர்
    பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட குளிர்ச்சியான வீடு: இரு பெண்களின் புதிய முயற்சி இந்தியா
    'வேலை செய்வதற்கான சிறந்த முறை' எது என்பதை சொல்கிறார் கீதா கோபிநாத் வைரல் செய்தி

    குஜராத்

    மருமகனுக்கு வாயில் சிகரெட் கொடுத்து வரவேற்ற மாமியார் - வைரல் வீடியோ வைரல் செய்தி
    வைரல் வீடியோ: குஜராத்தில் வாக்கிங் போன சிங்கங்கள் இந்தியா
    மோர்பி பால விபத்து: ஓவேரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தில் சரணடைந்தார் இந்தியா
    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை கலவரம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023