NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லக்னோ கட்டிடம் சரிந்து விபத்து: மீட்பு பணி தீவிரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    லக்னோ கட்டிடம் சரிந்து விபத்து: மீட்பு பணி  தீவிரம்
    இது குறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

    லக்னோ கட்டிடம் சரிந்து விபத்து: மீட்பு பணி தீவிரம்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 25, 2023
    02:55 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று(ஜன 24) நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

    இவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    நேற்று மாலை இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மேலும் ஒருவர் இன்று மீட்கப்பட்டுள்ளார்.

    இதுவரை மீட்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது.

    அதே நேரத்தில் குறைந்தது இருவர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ஒருவர், அவர்களுக்கு வெளிப்புற காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறியுள்ளார். சிடி ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் அவர்களுக்கு பெரிய காயம் எதுவுமில்லை என்பது தெரியவந்திருக்கிறது.

    லக்னோ

    இடிபாடுகளில் இருந்து இன்று ஒரு பெண்

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை சமர்பிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், சிக்கியுள்ள இருவரையும் கண்டுபிடிக்க ஒருங்கிணைந்த பல முகமைகள் தேடுதல் பணி நடத்தி வருகிறது.

    இதற்கிடையில், லக்னோ நிர்வாகம், ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள இந்த பல மாடி கட்டிடத்தை கட்டியவர் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

    மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற அமைப்புகளின் குழுக்கள் இன்று(ஜன 25) காலை ஒரு பெண்ணைக் காப்பாற்றி உள்ளனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

    இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    ஜனவரி 21க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; தொழில்நுட்பம்
    நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் சென்னை
    தன்பாலின ஈர்ப்புப்பாளர் நீதிபதியாவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு இந்தியா
    குடியரசு தின விழா கொண்டாட்டம் - எகிப்து அதிபர் வருகை மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025