NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லக்னோ கட்டிடம் சரிந்து விபத்து: மீட்பு பணி தீவிரம்
    இந்தியா

    லக்னோ கட்டிடம் சரிந்து விபத்து: மீட்பு பணி தீவிரம்

    லக்னோ கட்டிடம் சரிந்து விபத்து: மீட்பு பணி தீவிரம்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 25, 2023, 02:55 pm 0 நிமிட வாசிப்பு
    லக்னோ கட்டிடம் சரிந்து விபத்து: மீட்பு பணி  தீவிரம்
    இது குறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

    உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று(ஜன 24) நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மேலும் ஒருவர் இன்று மீட்கப்பட்டுள்ளார். இதுவரை மீட்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது. அதே நேரத்தில் குறைந்தது இருவர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்திருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ஒருவர், அவர்களுக்கு வெளிப்புற காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறியுள்ளார். சிடி ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் அவர்களுக்கு பெரிய காயம் எதுவுமில்லை என்பது தெரியவந்திருக்கிறது.

    இடிபாடுகளில் இருந்து இன்று ஒரு பெண்

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை சமர்பிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சிக்கியுள்ள இருவரையும் கண்டுபிடிக்க ஒருங்கிணைந்த பல முகமைகள் தேடுதல் பணி நடத்தி வருகிறது. இதற்கிடையில், லக்னோ நிர்வாகம், ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள இந்த பல மாடி கட்டிடத்தை கட்டியவர் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற அமைப்புகளின் குழுக்கள் இன்று(ஜன 25) காலை ஒரு பெண்ணைக் காப்பாற்றி உள்ளனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ரோஹிணி தியேட்டர் விவகாரம்: இன்றும் தொடர்கிறதா தீண்டாமை கொடுமை?தியேட்டர் உரிமையாளர்கள் அளித்த விளக்கம் திரைப்பட வெளியீடு
    ITR தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    அரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல் மாவட்ட செய்திகள்

    இந்தியா

    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி காங்கிரஸ்
    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி உலக செய்திகள்
    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் பாகிஸ்தான்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023