NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது
    சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது

    சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது

    எழுதியவர் Nivetha P
    Mar 22, 2023
    06:11 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை பெருநகரில் போதை தடுப்புக்கான நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துபவர், விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதன்படி, ஜி2 பெரியமேடு காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்ததன் பேரில், நேற்று(மார்ச்.,21) அல்லிக்குளம் லிங்க் ரோட்டில் கண்காணித்து வந்துள்ளார்கள்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை கண்டு விசாரணை செய்துள்ளனர்.

    அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    சிறையில் அடைப்பு

    கைது செய்த 2 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

    அதனையடுத்து அவரை சோதனை செய்தபோது கஞ்சாவினை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து அந்த நபரை விசாரித்ததில் அவர் பெயர் பிரதீப் கணேஷ் என்னும் முகமது(34) என்றும், அவர் சென்னை காவாங்கரை, புழல் என்னும் பகுதியில் வசித்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.

    அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ள நிலையில், அவரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

    இதேபோல D-5மெரினா காவல்நிலைய ஆய்வாளர் தலைமையில் காவல் குழுவினர் நேற்று நடத்திய சோதனையில், நேதாஜி சிலை அருகே கஞ்சா விற்பனைசெய்து கொண்டிருந்த தேபானந்த ராவத்(24) ஒடிசா மாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அவரிடமிருந்தும் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கைதுசெய்த இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    சென்னை

    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் தமிழ்நாடு
    VIT பல்கலைக்கழகத்தின் விழா ஒன்றில் பங்கேற்ற பாடகர் பென்னி தயாள், ட்ரோன் தாக்கி காயம் பாடகர்
    சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை தமிழ்நாடு
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் போக்குவரத்து காவல்துறை

    காவல்துறை

    கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் கைது கோவை
    வெளிமாநிலங்களில் பதுங்கிய ரவுடிகளை கைது செய்ய உத்தரவு - காவல்துறை டி.ஜி.பி. அதிரடி தமிழ்நாடு
    மதுரையில் மாடுகளை திருடிய வடமாநில கும்பல் கைது - சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி மதுரை
    குடியரசு தின விழாவில் ஜனாதிபதி விருது - தமிழகத்தில் 3 காவலர்களுக்கு அறிவிப்பு குடியரசு தினம்

    காவல்துறை

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025